நிலாவெளி கடலில் காணாமல் போன இரு இளைஞர்களில் ஒருவர் சடலமாக மீட்பு
திருகோணமலை நிலாவெளி கடலில் நீராடச் சென்ற இரண்டு இளைஞர்கள் காணாமல் போயிருந்த நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணம்,வலிகாமம் தெற்கு பிரதேசத்திலுள்ள குப்பிளான் பகுதியைச் சேர்ந்த நவரஞ்சன் கௌதமன் (21வயது) என்பவர் உயிரிழந்துள்ளதாகவும், சிவச்சந்திரன் ராசா சிந்துஜன் காணாமல்போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிவராத்திரி தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் நண்பர்கள் சிலர் வருகை தந்ததாகவும், சமய வழிபாடுகளை முடித்து விட்டு நிலாவெளி கடற்கரை பகுதிக்கு நீராடச் சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
