ஹட்டனில் நீரோடையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம்
ஹட்டனில் இருந்து மகாவலி கங்கைக்கு தண்ணீர் செல்லும் ஹட்டன் ஓயா நீரோடையில் காணப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஷெனன் ஃபுருட்ஹில் தேயிலை தோட்டத்திற்கு அருகில் ஓடும் ஹட்டன் ஓயா நீரோடையில் இந்த சடலம் காணப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் வழங்கிய தகவலை அடுத்து அங்கு சென்ற ஹட்டன் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
சுமார் 50 வயது மதிக்கத்தக்க இந்த பெண்ணின் உடல் சில தினங்களாக நீரோடையில் இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. சடலம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.



படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri