மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு
மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவரது வீட்டிலிருந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பிறந்துரைச்சேனையைச் சேர்ந்த 60 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான முஹமது முஸ்தபா செய்யது ஹமீட் என்பவரே இவ்வாறு இன்று (17) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சம்பவதினமான நேற்று இரவு வீட்டின் அறையில் நித்திரைக்குச் சென்றவர் இன்று மாலையாகியும் அறையிலிருந்து வெளியே வராததையடுத்து அறைக்கதவை உடைத்து உள்ளே சென்ற போது அவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு