அப்பிள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம் - செய்திகளின் தொகுப்பு
அப்பிள் நிறுவனம் தனது புதுப்பிக்கப்பட்ட மென்பொருளான ஐஓஎஸ் (iOS) 18 இனை நிறுவனத்தின் வருடாந்த மென்பொருள் பொறியியலாளர்களின் மாநாட்டில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, குறித்த மாநாடானது எதிர்வரும் ஜூன் மாதம் இடம்பெறவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த மென்பொருளானது அப்பிள் நிறுவனத்தின் வரலாற்றின் மிகப்பெரிய அடைவாக இருக்கும் என்றும், இது அப்பிள் நிறுவனத்தின் நீண்ட கால இலட்சியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்பை மேம்படுத்திய பதிப்பாக Siri ஐ இந்த மென்பொருள் கொண்டுள்ளது. Siri மற்றும் Messages ஆகிய இரண்டு செயலிகளும் வாக்கியங்கள் மற்றும் கேள்விகளை எவ்வாறு தானாக முடிக்க முடியும் என்பதை மேம்படுத்தும் புதிய அம்சங்களை அப்பிள் அறிமுகப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வரகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri