மியன்மார் இராணுவத்திற்கு எதிராக பேசிய மியன்மார் நாட்டு அழகி - இப்படிக்கு உலகம் தொகுப்பு
மியன்மாரில் கடந்த பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகின்றது. அதேவேளையில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு மக்கள் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் தாய்லாந்தில் நடைபெற்ற அழகி போட்டி ஒன்றில் கலந்துகொண்ட மியன்மார் நாட்டு அழகி ஹான் லே, மியான்மர் ராணுவத்துக்கு எதிராக பேசியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது 2 நிமிடப் பேச்சு சர்வதேச பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாகியுள்ளது.தாய்லாந்தில் நடைபெற்ற ‘மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2020' அழகி போட்டியில் பேசிய ஹான் லே ‘‘இன்று எனது நாட்டில் பல மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
ஜனநாயகத்துக்காக மியன்மார் மக்கள் சாலைகளில் இறங்கி போராடிக்கொண்டிருக்கிறார்கள்.மியன்மாருக்கு உதவுங்கள். சர்வதேச உதவி மியன்மாருக்கு தற்போது அவசியம் தேவைப்படுகின்றது.
சிறந்த உலகை உருவாக்குவோம் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,