பேராயர் பொலிஸாருக்கு பாடம் கற்பிக்கின்றார்:கடுமையாக விமர்சித்துள்ள ராஜாங்க அமைச்சர்
ராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க,(Wimalaweera Dissanayake) கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் (Cardinal Malcolm Ranjith) ஆண்டகையை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பொரள்ளையில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பாக பேராயர் நடந்துக்கொள்ளும் விதம் தொடர்பாகவே ராஜாங்க இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
பேராயர், பொலிஸார் கடமையாற்ற வேண்டிய விதம் குறித்து கற்பித்து வருகிறார். அரசாங்கத்திற்கு ஆட்சி செய்யும் விதம் பற்றி கற்பிக்கின்றார்.
பொலிஸார் காலையில் விசாரணைகளை ஆரம்பித்த பின்னர், மாலையில் விசாரணை சரியில்லை என குற்றம் சுமத்துகிறார்.
அத்துடன் ஈஸ்டர் தாக்குதலை தற்போதைய அரசாங்கமே நடத்தியது போன்ற தோரணையில் குற்றம் சுமத்தி வருகிறார். பேராயர் தொடர்பில் இவற்றை கூற தான் அச்சப்படவில்லை எனவும் விமலவீர திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு பொரள்ளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் வைக்கப்பட்ட கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் நடத்தி வரும் விசாரணைகள் குறித்து பேராயர் தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.
அத்துடன் ஈஸ்டர் தாக்குதலை ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்தினார்களே என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.