தையிட்டி விகாரை பிரச்சினை என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினை!

Sri Lankan Tamils Jaffna Sri Lankan protests Sri Lankan Peoples
By Shan Feb 11, 2025 06:11 AM GMT
Report

தையிட்டி விகாரை பிரச்சினை என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினை என்பதை உணராவிடில் பாரிய ஆபத்திற்கே இட்டுச் செல்லும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (10.02.2025) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும், இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசமான தையிட்டியில் தமிழர்களின் அரசியலுக்கு சவால் விட்டும் ஆக்கிரமிப்பின் நோக்கத்தோடும் படையினர் திஸ்ச விகாரையும், தூபியையும் அமைத்துள்ளமை சட்ட விரோதமானது மட்டுமல்ல.

தையிட்டியில் மாபெரும் போராட்டம்: பெருகும் ஆதரவு

தையிட்டியில் மாபெரும் போராட்டம்: பெருகும் ஆதரவு

சட்ட விரோத செயற்பாடுகள்

அது மனித நீதிக்கும், மக்களின் அமைதி வாழ்வுக்கும், சமாதானத்திற்கும், நாட்டின் அரசியல் செல்நெறிக்கும் எதிரானதோடு இறை நீதிக்கும் எதிரானதாகும் என்பதால் சமய அமைப்புகளும் அதன் தலைமைத்துவங்களும் விசேடமாக வடகிழக்கில் இருக்கும் சமய அமைப்புகளும் சமய தலைமைத்துவங்களும் இனியும் மௌனம் காக்காது தான் சார்ந்த சமயநெறி நின்று மக்களின் சார்பெடுத்து இறைநீதி குரல் எழுப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.

தையிட்டி விகாரை பிரச்சினை என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினை! | Thayitti Issue Mah Shakthivel S Opinion

யுத்த காலத்தில் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் படையினரால் புரியப்பட்ட சட்ட விரோத செயற்பாடுகள், கொலைகள், காணாமலாக்குதல் தொடர்பில் மக்கள் நீதி கேட்டு வீதியில் நிற்கின்றனர். மேலும் சர்வதேச கதவுகளையும் தட்டுகின்ற நிலையில் சமய அமைப்புகளும் மக்களுக்கு தூரமாகவே நிற்பதை அவதானிக்கின்றோம்.

ஆனால் ஒரு சில சமய அருட் தொண்டர்கள் துணிச்சலோடு மக்களோடு நின்று குரல் எழுப்புகின்றனர். இன்னும் சிலர் உயிர் தியாகிகளாகியுள்ளனர். அவர்களை பாராட்டுவதோடு அவர்கள் வரலாற்றில் பதியப்பட்டவர்களாவர்.

இவர்களை சமய அமைப்புகளும், அதன் தலைமைத்துவங்களும் உரிய அங்கீகாரம் அளிக்காமை வேதனை அளிக்கின்றது. தற்போதைய சூழ்நிலையில் தையிட்டி விகாரை பிரச்சினை என்பது அக்கிராம மக்களின் பிரச்சினையோ, அது அமைந்துள்ள தனியார் காணி உரிமையாளர்கள் பிரச்சினையோ, அல்லது ஏதோ ஒரு கட்சி கட்சியின் பிரச்சினையோ அல்ல. இது ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினை. தமிழர் தாயக பிரச்சினை.

தையிட்டி விகாரை உடனடியாக அகற்றப்பட்டே ஆக வேண்டும்!

தையிட்டி விகாரை உடனடியாக அகற்றப்பட்டே ஆக வேண்டும்!

ஆதிக்க வாதம் 

நாட்டின் அரசியல் பிரச்சினை என்பதை உணராவிடில் பாரிய ஆபத்திற்கே இட்டுச் செல்லும் கவனத்திற் கொள்ள வேண்டும். எழுந்துள்ள விகாரை பிரச்சினை கடந்த காலங்களில் படையினர் புரிந்த மனித படுகொலைகளையும் மேவிய அரசியல் கொலை அடையாளமாகும். அரச பயங்கரவாதம் புத்தரின் தர்ம உபதேச கொள்கைகளையும், கோட்பாடுகளையும் குழி தோண்டி புதைத்து விட்டே நாட்டின் நடைமுறை சட்டங்களுக்கு எதிராக சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு மனநிலையினின்று துணிச்சலோடு இதனை கட்டி எழுப்பியுள்ளது.

இதற்கு எதிராக உண்மையான சமய தலைமைத்துவங்கள் இனம், மொழி, சமயம் கடந்து நீதி குரல் எழுப்ப வேண்டிய காலம் இது. ஒரு இனத்தை ஒடுக்கவும், அவர்களின் இருப்பை அழிக்கவும், அரசியல் அபிலாசைகளை எதிர்பார்ப்பை சிதைக்கவும் எந்த ஒரு சமயமும் தம் அடையாளங்களை பாவிப்பதையும், ஆக்கிரமிப்புக்காக நிறுவுவதையும் அங்கீகரிக்க முடியாது. அது எந்த வடிவில் நிகழ்ந்தாலும் அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய சமயம் தார்மீக கடமை ஆன்மீக தலைமைகளுக்கு உண்டு.

தையிட்டி விகாரை பிரச்சினை என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினை! | Thayitti Issue Mah Shakthivel S Opinion

கடந்த கால தவறுகளில் தொடர்ந்து இருக்காது சமய தலைமைகள் தம் அமைப்பு சார்ந்தும், தனித்தனியாகவும் கூட்டாகவும் இறை நீதியை வெளிப்படுத்த ஒன்றிணைய வேண்டும். தற்போதைய தேசிய மக்கள் சக்தியும் நாட்டின் ஜனாதிபதியும் கிளீன் ஸ்ரீலங்கா (தூய்மையான இலங்கை) தொடர்பில் அதிகம் பேசுகின்ற கலாசாரமாகியுள்ளது. வரவேற்கத்தக்கது. ஆனால் அது இலஞ்சம், ஊழல், அரச சொத்துக்கள் கொள்ளையிடல் மற்றும் குப்பை குளங்கள் தொடர்பாக மட்டும் இருக்கக் கூடாது.

அரச பயங்கரவாதத்தையும் அதன் இன சமய கலாசார ஆக்கிரமிப்பு அழிப்பு என்பவற்றையும் சிங்கள பௌத்த ஆதிக்க வாதத்தையும் தடுத்து நிறுத்துவதும் கிளீன் சிறிலங்காவுக்குள் உள்ளடக்குதல் வேண்டும்.

இதற்கும் சமய தலைமைத்துவங்கள் ஆட்சியாளர்களுக்கு அளுத்தம் கொடுத்தல் வேண்டும். இதன் மூலமே நாட்டின் நல்லிணக்கத்தை கட்டி எழுப்ப முடியும். சமயத்தை காக்கவும் முடியும். அரசியல் நீதி இல்லாதவிடத்து அதற்கு எதிராக குரல் கொடுக்க முடியாவிடில் சமயம் வாழாது. வளராது என்பதையும் நினைவில் கொள்வோம்.

நாட்டின் தேங்காய் பற்றாக்குறை தொடர்பில் விமல் வீரவன்ச விளக்கம்

நாட்டின் தேங்காய் பற்றாக்குறை தொடர்பில் விமல் வீரவன்ச விளக்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Grevenbroich, Germany

19 Apr, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பிரான்ஸ், France

15 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, காங்கேசன்துறை, கொழும்பு, Markham, Canada

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி கிழக்கு, வல்வெட்டி, அல்வாய், தெஹிவளை

01 May, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

19 Apr, 2004
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மயிலிட்டி, Fresnes, France

17 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், New Malden, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US