பணம் அச்சிடுவதற்கும் விலையேற்றத்திற்கும் தொடர்பில்லை! - மத்திய வங்கி ஆளுநர்
பணம் அச்சிடப்படுவதற்கும் பொருட்களின் விலை ஏற்றத்திற்கும் தொடர்பு கிடையாது என மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, வெளிநாடுகளில் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட மாற்றம் ஆகியனவே இந்த விலையேற்றத்திற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
மத்திய வங்கியின் இணைய தளத்திற்கு பிரவேசித்து இந்த தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். எவ்வளவு தொகை பணம் அச்சிடப்பட்டுள்ளது என்பதனை அறிந்து கொள்ள முடியும். பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டியுள்ளது.
நாம் இந்த விடயம் குறித்து மிகுந்த அவதானத்துடன் முகாமைத்துவம் செய்கின்றோம். எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலை அதிகரித்தமைக்கும் பணம் அச்சிடலுக்கும் தொடர்பில்லை.
பொருட்களின் விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி போன்றனவே விலை ஏற்றத்திற்கான காரணமாகும் என அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
அவ ஆரா பத்துக்கு பத்து பாடலுக்கு பிரியங்கா தேஷ்பாண்டே யாருடன் நடனம் ஆகியுள்ளார் பாருங்க.. வீடியோ இதோ Cineulagam
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri