வாகன விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலி
தம்புள்ளை - கண்டி பிரதான வீதியின் விகாரை சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (05.2.204) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளத்திலிருந்து பிரதான வீதியை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியோரத்தில் இருந்த நபர் ஒருவரையும், குழந்தை ஒன்றை சுமந்து சென்ற பெண் ஒருவரையும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதி
இந்தவிபத்தில் படுகாயமடைந்த நபரும், குழந்தையை சுமந்து சென்ற பெண்ணும் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த பெண்ணும் நபரும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பெண்ணின் 9 மாத கைக்குழந்தை தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பண்டாரகம பகுதியில் வசிக்கும் 45 வயதுடைய ஒருவரும், அடையாளம் காணப்படாத 43 வயதுடைய பெண்ணுமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். சடலங்கள் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் காயமடைந்துள்ளதுடன், அவர் பொலிஸ் பாதுகாப்பில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan