திருகோணமலை மாவட்ட சமாதான நீதிவானாக பதவியேற்ற தம்பிராசா ராஜ்குமார்
திருகோணமலை மாவட்ட சமாதான நீதவானாக ராஜ்குமார் தம்பிராசா பதவியேற்றுள்ளார்.
திருகோணமலை மாவட்ட நீதிபதியாகிய இஷ்மைல் பவுஷ் ரஷாக் முன்னிலையில் அவர் கடந்த (6) ஆம் திகதி பதவியேற்றுள்ளார்.
பதவியேற்பு
தம்பிராசா ராஜ்குமார் 25 வருடகாலமாக ஆசிரியர் தொழில் செய்து வருவதுடன் ஒக்ஸ்போட் கல்வி நிறுவனத்தின் இயக்குனராகவும் இருப்பதோடு திருகோணமலை மாவட்ட சமூகசேவை அமைப்புகளான தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் தலைவராகவும் இலிங்கநகர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கிளைக்குழு தலைவராகவும் இலிங்கநகர் பாலமுருகன் ஆலயத்தின் கணக்காலராகவும் கோணலிங்க சனசமூக நிலையத்தின் பொருளாளராகவும்சமூக சேவையும் செய்து வருகின்றார்.
கிராமிய பொலிஸ் பாதுகாப்பு குழுவின் உறுப்பினராவும் பல சமூகபணிகளை செய்து வருவதோடு கிழக்கு மாகாண கனடா உறவுகரங்கள் அமைப்பின் இயக்குனராக பல சமூக பனிகளை திறன்பட செய்து வரும் இவர் ஒரு கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா பட்டதாரியாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடிய விஷம் கொண்ட red bellied black பாம்பின் வாலை பிடித்து இழுத்த நபர்... இறுதியில் நேர்ந்த கதி Manithan

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri
