பரிதாபமாக பலியான கொழும்பு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் : CCTV காணொளி
தலவத்துகொட விக்கிரமசிங்கபுர சந்தியில் வீதியில் விபத்துக்குள்ளான கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீட விரிவுரையாளர் உயிரிழந்துள்ளார்.
லக்மினி போகமுவ என்பவரே வாகன விபத்தில் சிக்கி பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.
விபத்தின் போது சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
பெண் மரணம்
குறித்த விரிவுரையாளர் வெள்ளைக் கோட்டில் வீதியை கடக்காமல், வீதியின் மறுபுறம் வரும் வாகனங்களைக் கவனிக்காமல் பயணித்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த விபத்தை ஏற்படுத்திய லொறி ஓட்டுநர் கனரக வாகனங்களுக்கான வாகன உரிமம் இல்லாதவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.