பிரித்தானியாவில் தைப்பொங்கல் மற்றும் தமிழ் பாரம்பரிய மாத அறிமுக விழா (Photos)
தமிழ் பாரம்பரியத்தின் நேர்த்தியை அடையாளம் காணும் வகையில், பிரித்தானியத் தமிழர்கள் மன்றம் (BTF) தைப்பொங்கல் கொண்டாட்டத்தை முன்னெடுத்துள்ளது.
புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தமிழ் மரபை மேம்படுத்துவது மற்றும் உலகிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆழமாக வேரூன்றிய தமிழ் பாரம்பரியத்தின் நுட்பம்.
எனவே, பிரித்தானியத் தமிழர்கள் மன்றம் அதன் முன்னோடி நகர்வாகத் தைப் பொங்கல் கொண்டாட்டத்தை முன்னெடுத்துள்ளது.
அடுத்த ஆண்டுகளில், பிரித்தானியத் தமிழர்கள் மன்றம் பல சமூக அமைப்புகளுடன் ஒத்துழைத்துத் தொடர்ந்தும் அதன் விலைமதிப்பற்ற “யாதும் ஊரே யாவரும் ரேளீர்” என்ற தமிழ் சொற்றொடரைப் பின்பற்றி, தமிழ் பாரம்பரியத்தின் செழுமையை எடுத்துக்காட்டும் என்றும் கூறப்படுகின்றது.