இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தால் இலங்கையருக்கு கிடைத்துள்ள வாய்ப்பு
10,000 இலங்கை தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய தாய்லாந்து ஒப்புதல் அளித்துள்ளதாக தாய்லாந்தின் மூத்த அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார்.
புதுப்பிக்கப்பட்ட எல்லைப் பதற்றங்களுக்கு மத்தியில் கம்போடிய தொழிலாளர்கள் நாடு திரும்பியதைத் தொடர்ந்து தாய்லாந்தில் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையை போக்கும் வகையிலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்துச் செய்யும் தீர்மானத்துக்கு எதிராக மேலும் இருவர் மனு தாக்கல்!
வெளிநாட்டு ஊழியர்கள்
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளின்படி, தாய்லாந்து, வயதான மக்கள்தொகை மற்றும் குறைந்து வரும் உள்நாட்டு பணியாளர்களை எதிர்கொள்வதுடன் ஏற்கனவே விவசாயம், கட்டுமானம் மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்ட மூன்று மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு ஊழியர்களை நம்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் தொழிலாளர் அமைச்சர் இது தொடர்பில் கூறுகையில், 30,000க்கும் மேற்பட்ட இலங்கைத் தொழிலாளர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளதாகவும், ஆரம்ப கட்டத்தில் 10,000 பேர் பணியமர்த்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
புதிய கொள்கை
நேபாளம், பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் புதிய கொள்கையின் கீழ் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே கடந்த மாதம் ஏற்பட்ட பயங்கர எல்லை மோதலில் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டதுடன் 300,000 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்தனர். இதனையடுத்தே இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



