பேங்கொக்கில் பாரிய நிலநடுக்கம்! அங்குள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு
தாய்லாந்தின் - பேங்கொக் மற்றும் ஏனைய பகுதிகளில் ஏற்பட்ட பாரி நிலநடுக்கங்களைத் தொடர்ந்து அந்த நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கைத் தூதரகம் அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
இதன்படி, நிலவும் அவசர நிலையின் காரணமாக இலங்கையர்கள் யாரும் பாதிக்கப்பட்டால் மற்றும் உதவி தேவைப்பட்டால், +66 812 498 011 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கைத் தூதரகத்தின் அறிவிப்பு
தற்போது குறித்த பகுதிகளில் பாரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதனை அடுத்து, அங்கு வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பான எவ்வித பாதக அறிவிப்பும் வெளிவரவில்லை என்று இலங்கைத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பேங்கொக்கில் உள்ள இலங்கைத் தூதரகம், தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அறிவித்துள்ளது.
