இலங்கை தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

Sri Lanka Army Ranil Wickremesinghe Sri Lanka Emmanuel Macron France
By Mayuri Jun 22, 2023 09:09 AM GMT
Report

2006ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 17 பிரான்ஸ் உதவி நிறுவன (ACF) செயற்பாட்டாளர்களின் படுகொலைக்கு இன்றுவரை நீதி வழங்காமல் இருக்கும் நிலையில் அதற்கான விசாரணைக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வலியுறுத்தும்படி பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடிதமொன்றின் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

சர்வதேச குற்றங்கள்

குறித்த கடிதத்தில் மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் பான் கீ மூனால் சார்லஸ் பெட்றியின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் 70,000 பொது மக்கள் கொல்லப்பட்டதும் மற்றும் மானிடத்திற்கு எதிரான குற்றங்களும் போர்க்குற்றங்களும் நடைபெற்றமைக்கு நம்மத்தகுந்த சாட்சியங்கள் இருந்தமையையும் சுட்டிக்காட்டி, அத்துடன் பேர்லின் மக்கள் தீர்ப்பாயம் இனப்படுகொலை தமிழ் மக்களிற்கு எதிராக நடைபெற்றது என்பதையும் சுட்டிக்காட்டி இந்த சர்வதேச குற்றங்களைப் புரிந்த எவருமே நீதியின் முன் நிறுத்தப்படவில்லை என்பதையும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு பறந்த கடிதம் | Tgte Letter To France President About Sri Lanka

சர்வதேச நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் இச்சர்வதேச குற்றங்களுக்கான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை 30/1 தீர்மானம் இலங்கையின் உள்நாட்டு நீதிப்பொறிமுறை காத்திரமான ஒன்றல்ல என்பதை எடுத்துக் காட்டுகிறது என்றும் கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முன்னாள் மனித உரிமை ஆணையாளர் அல் ஹீசைன் தனது 2015ஆம் ஆண்டு அறிக்கையிலும் கடந்த வாரம், இம் மாதம் நடைபெற இருக்கின்ற இலங்கை தொடர்பான உலகளாவிய கால ஆய்வு (universal periodic review) தொடர்பாக லக்ஸம்பேர்க், போட்ஸ்வானா, ஈக்வடர், கிழக்குத் தீமோர் ஆகிய நாடுகள் இலங்கை ரோம் உடன்படிக்கையில் கையொப்பம் இட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறி உள்ளதையும் இக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அழுத்தம் கொடுக்குமாறு கோரிக்கை

அத்துடன் இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தை பின்னோக்கி (retro active) ஏற்றுக் கொள்ளும்படி அழுத்தம் கொடுக்குமாறு கோரியுள்ளார்.

இலங்கை தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு பறந்த கடிதம் | Tgte Letter To France President About Sri Lanka

அவ்வாறு இலங்கை பின்னோக்கி (retro active) நியாயாதிக்கத்தை ஏற்றுக் கொள்வது, 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற பிரான்ஸ் நிறுவன செயற்பாட்டாளர்களின் படுகொலைக்கும், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட 70,000 பொது மக்களுக்கும் நீதி வழங்குவற்கு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் தேசியப் பிரச்சினை பொது வாக்கெடுப்பு மூலமே தீர்க்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டையும் இலங்கை ஜனாதிபதிக்கு எடுத்துரைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் New Caledoniaவில் பொதுசன வாக்கெடுப்பு நடத்தியமைக்கு பிரான்ஸ் அதிபர் மக்ரோனுக்கு பாராட்டு தெரிவித்து, பொதுசன வாக்கெடுப்பின் பிறப்பிடம் பிரான்ஸ் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இலங்கையின் 6வது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டம், அமைதி முறையில் தனிநாடு கேட்பதை தடை செய்வது சுதந்திரத்திற்கு முரணானது என்றும், தமிழ் மக்கள் தமது அரசியல் பெரு விருப்பினைத் தெரிவிப்பதற்கான அரசியல் வெளியை முடக்குவதையும் சுட்டிக்காட்டி 6வது அரசியல் அமைப்பு சட்டத்தை நீக்கும்படி கோருமாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு பறந்த கடிதம் | Tgte Letter To France President About Sri Lanka

பிரான்ஸ் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய அதே சமயம் Paris Club இற்கும் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், இலங்கையின் கடன் மீள் சீரமைப்பையும், மேலதிக நிதி உதவியையும் இலங்கையின் இராணுவ செலவீனங்களை குறைப்பதும் சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்புக் கூறலையும் இணைக்கும்படி கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Hannover, Germany

30 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US