அமெரிக்காவில் பதிவாகியுள்ள கொடூர சம்பவம்: துரிதமாக செயல்பட வேண்டிய நேரம் இது என்கிறார் ஜோ பைடன்
ஆயுதக் கட்டுப்பாடு குறித்து எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் இதுவரை அமெரிக்காவில் எடுக்கப்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் இளைஞர் ஒருவர் நேற்று நடத்திய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ஜப்பானிற்கான விஜயத்தை முடித்துக் கொண்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று அமெரிக்கா திரும்பியுள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த அசம்பாவிதம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றுகையில்,
டெக்சாஸ் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மிகவும் கொடூரமான ஒன்று. இதுபோன்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மற்ற உலக நாடுகளில் மிகவும் அரிதாக நடைபெறுகின்றன
ஆனால், அமெரிக்காவில் இது அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது. இதற்கு என்ன காரணம்? ஆயுதக் கட்டுப்பாடு குறித்து நாம் வெறுமென பேசிதான் வருகிறோம்.
எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் இதுவரை அமெரிக்காவில் எடுக்கப்படவில்லை. துப்பாக்கி கலாச்சாரத்துக்கு என்று நாம் முற்றுப்புள்ளி வைக்க போகிறோம்?
எத்தனை காலத்திற்குதான் இந்த அவலத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க போகிறோம்? நான் மிகுந்த விரக்தியில் இருக்கிறேன். நாம் துரிதமாக செயல்பட வேண்டிய நேரம் இது என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் பாலர் பாடசாலையில் துப்பாக்கி சூடு - பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan
