உலக கிண்ணப் போட்டிகளுக்கு பயங்கரவாத மிரட்டல்: சுவரொட்டியால் அச்சம்
அமெரிக்கா(America) - நியூயோர்க்கில் இரத்தம் சிந்துவது குறித்த சுவரொட்டி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, 2024 உலக கிண்ண இருபதுக்கு இருபது(T20 World cup) போட்டிகளின் போது, பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்குமா என்ற அச்சம் மீண்டும் எழுந்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ்-க்கு (ISIS) ஆதரவான சுவரொட்டியில், ஒரு முகமூடி அணிந்த மனிதன் தோளில் துப்பாக்கியுடன் இருப்பதைக் காட்டுகிறது.
ஐஎஸ்ஐஎஸ்-க்கு ஆதரவான சுவரொட்டி
அத்துடன், அந்த சுவரொட்டியில் “நீங்கள் போட்டிக்காக காத்திருங்கள், நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம்” என்று இரத்தச் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டுள்ளது.
2024 ஜூன் 9 ஆம் திகதியன்று 'நாசாவ் மைதானத்தை (Nassau Stadium) இந்த சுவரொட்டி குறிப்பிடுவதுடன் குறித்த திகதியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் தமது குழு ஆட்டத்தில் போட்டியிடவுள்ளன.

மேலும், சுவரொட்டியில் மைதானத்தின் மீது பறக்கும் ட்ரோன்களின் படங்கள் மற்றும் டைனமைட் குச்சியுடன் கூடிய கடிகாரம் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
எனினும், இந்த சுவரொட்டி அச்சத்தை தூண்டவில்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
ஒவ்வொரு நாளும் முரண்பாடான பேச்சு- ஈரான் போரில் ட்ரம்ப் நிலைப்பாட்டை விமர்சித்த மேக்ரான் News Lankasri
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri