சீனாவில் அடுக்குமாடிக் கட்டிடத்தில் பயங்கர தீ : ஆபத்தான நிலையில் 300 பேர்
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள கொங்கொங் - ஹாஸ்வே பே என்ற இடத்தில், 38 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இன்று நண்பகல், இக்கட்டிடத்திற்கு மின் இணைப்புகளை வழங்கும் ஒருங்கிணைந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பின் கட்டிடத்தின் பிற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியதால், கட்டிடத்தில் இருந்த 300 க்கும் அதிகமானோர் சிக்கிக்கொண்டனர்.
விபத்துக் குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீ விபத்தில் 8 பேர் மூச்சுத்திணறலுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனையோரை மீட்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

Optical Illusion:'325' மற்றும் '235' என்ற இலக்கங்களுக்கிடையில் இருக்கும் வித்தியாச எண் என்ன? Manithan

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
