சீனாவில் அடுக்குமாடிக் கட்டிடத்தில் பயங்கர தீ : ஆபத்தான நிலையில் 300 பேர்
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள கொங்கொங் - ஹாஸ்வே பே என்ற இடத்தில், 38 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இன்று நண்பகல், இக்கட்டிடத்திற்கு மின் இணைப்புகளை வழங்கும் ஒருங்கிணைந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பின் கட்டிடத்தின் பிற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியதால், கட்டிடத்தில் இருந்த 300 க்கும் அதிகமானோர் சிக்கிக்கொண்டனர்.
விபத்துக் குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீ விபத்தில் 8 பேர் மூச்சுத்திணறலுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனையோரை மீட்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan