சீனாவில் அடுக்குமாடிக் கட்டிடத்தில் பயங்கர தீ : ஆபத்தான நிலையில் 300 பேர்
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள கொங்கொங் - ஹாஸ்வே பே என்ற இடத்தில், 38 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இன்று நண்பகல், இக்கட்டிடத்திற்கு மின் இணைப்புகளை வழங்கும் ஒருங்கிணைந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பின் கட்டிடத்தின் பிற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியதால், கட்டிடத்தில் இருந்த 300 க்கும் அதிகமானோர் சிக்கிக்கொண்டனர்.
விபத்துக் குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீ விபத்தில் 8 பேர் மூச்சுத்திணறலுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனையோரை மீட்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
