சீன கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம் - செய்திகளின் தொகுப்பு
அமெரிக்காவுக்கு சொந்தமான அணுவாயுத நீர்மூழ்கி கப்பல் ஆசிய பசுபிக் பிராந்திய கடலில் மூழ்கி இருந்த போது, அடையாளம் தெரியாத பொருளொன்றினால் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அதில் சில கடற்படையினர் காயமடைந்துள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது தெளிவில்லை என கூறியுள்ள அவர்கள், நீர்மூழ்கி கப்பல் சிறப்பாக இயங்குவதாக கூறியுள்ளனர்.
தென் சீனக் கடலில் சர்வதேச எல்லையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், சம்பவத்தில் 11 கடற்படையினர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது முக்கிய செய்திகளின் தொகுப்பு,