கொழும்பு- தெமட்டகொட பேஸ்லைன் வீதியில் தொடரும் பதற்ற நிலை(Photos)
கொழும்பு – தெமட்டகொட பகுதியில் இன்றிரவு ஏற்பட்ட பதற்ற நிலை தற்போது தணிந்துள்ளது.
தெமட்டகொட, பொது சந்தையை அண்மித்ததாக பேஸ்லைன் வீதியை மறித்து இன்று பிற்பகல் முதல் பிரதேசவாசிகள் எரிவாயு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், மூடப்பட்ட வீதியை ஒரு தரப்பினர் திறந்தமையினால், அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தரப்பினர்களுக்கு இடையில் மோதலொன்று ஏற்பட்டுள்ளது.
நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து
நிலைமையை கட்டுப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தினை பதவி விலக கோரி நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கொழும்பு - தெமட்டகொட பேஸ்லைன் வீதியில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எரிவாயுவினை பெற்றுத்தர கோரி மக்கள் இவ் எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருக்கும் நிலையிலும் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.



Neeya Naana: மனைவியின் எதிர்பார்ப்பால் பேச முடியாமல் நின்ற கோபிநாத்... பரிதாப நிலையில் கணவர் Manithan
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri