கொழும்பு- தெமட்டகொட பேஸ்லைன் வீதியில் தொடரும் பதற்ற நிலை(Photos)
கொழும்பு – தெமட்டகொட பகுதியில் இன்றிரவு ஏற்பட்ட பதற்ற நிலை தற்போது தணிந்துள்ளது.
தெமட்டகொட, பொது சந்தையை அண்மித்ததாக பேஸ்லைன் வீதியை மறித்து இன்று பிற்பகல் முதல் பிரதேசவாசிகள் எரிவாயு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், மூடப்பட்ட வீதியை ஒரு தரப்பினர் திறந்தமையினால், அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தரப்பினர்களுக்கு இடையில் மோதலொன்று ஏற்பட்டுள்ளது.
நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து
நிலைமையை கட்டுப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தினை பதவி விலக கோரி நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கொழும்பு - தெமட்டகொட பேஸ்லைன் வீதியில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எரிவாயுவினை பெற்றுத்தர கோரி மக்கள் இவ் எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருக்கும் நிலையிலும் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.



இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri