காலி மாநகர சபை அமர்வில் பதற்ற நிலை
காலி மாநகர சபையில் இன்று நடைபெற்ற விசேட பொதுச்சபை கூட்டத்தில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) கட்டுப்பாட்டில் உள்ள சபை, அமர்வின் தொடக்கத்திலிருந்தே எதிர்க்கட்சி பிரதிநிதிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டதால் இந்த பதற்ற நிலை உருவாகியுள்ளது.
மாநகர சபையில் பதற்ற நிலை
மாநகர மேயர் சபையைத் தொடங்கியவுடன், சபையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தமையினால் சபையில் அமைதியற்ற சூழல் உருவானது. .

இதன்போது, "திருடன் திருடன், எமது வாக்குகளைக் கொள்ளையடித்தான்" என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கோஷமிட்டனர்.
இருப்பினும், மேயர், நிகழ்ச்சி நிரலுக்கு அமைய சபையின் நடவடிக்கைகளை முன்னெடுத்து சென்றுள்ளார்.

எனினும், அதன் பின்னர் குழுநிலை அமர்வு அறிவிக்கப்பட்டவுடன், கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தண்ணீர் போத்தல்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த நிலைமை மேலும் மோசமடைந்ததையடுத்து, சபையை அரை மணி நேரத்திற்கு ஒத்திவைத்த மேயர் சபையிலிருந்து வெளியேறியுள்ளார்.
முகேஷ் அம்பானியிடம் இருந்து ரூ 2.6 லட்சம் கோடி இழப்பீடு கோரும் இந்தியா... தீர்ப்பு மிக விரைவில் News Lankasri