ஆப்கானிஸ்தானில் துப்பாக்கித்தாரிகளின் அட்டகாசம்: குறைந்தது 10 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் (Afghanistan) நஹ்ரின் மாவட்டத்தில் உள்ள ஒரு வணக்கத்தலத்தில், துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மதச் சடங்கில் பங்கேற்ற சூஃபிகள் என்ற இஸ்லாம் மத பிரிவினர் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
பாதிக்கப்பட்ட தேசம்
தலிபான்கள், 2021 ஆகஸ்ட் 15 ஆம் திகதியன்று நாட்டைக் கைப்பற்றினர் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட தேசத்திற்கு பாதுகாப்பை மீட்டெடுப்பதாக சபதம் செய்தனர்.
எனினும் அங்கு தாக்குதல்கள் தொடர்கின்றன. இந்த தாக்குதல்களில் பெரும்பாலானவற்றுக்கு, தீவிரவாத இஸ்லாமிய அரசான ஐஎஸ்ஐஎஸ் குழுவின் உள்ளூர் பிரிவினரே உரிமை கோரியுள்ளனர்.
முன்னதாக, செப்டம்பரில், மத்திய ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
