காய்ச்சல் உள்ளவர்களுக்கு அவசர அறிவுறுத்தல் - 10 மாவட்டங்கள் அபாய வலயங்களாக அடையாளம்
இரண்டு நாட்களுக்கும் மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக வைத்திய ஆலோசனையை நாடுமாறு நாட்டு மக்களுக்கு அவசர அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், டெங்கு காய்ச்சல் கோவிட்டை போல் இல்லை. சமூக இடைவௌியை கடைபிடிப்பதால் அதில் இருந்து பாதுகாப்பு பெற முடியாது எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை நாட்டில் டெங்கு அபாயமிக்க வலயங்களாக 10 மாவட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தேசிய டெங்கு ஒழிப்பு பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் ஹிமாலி ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan