காய்ச்சல் உள்ளவர்களுக்கு அவசர அறிவுறுத்தல் - 10 மாவட்டங்கள் அபாய வலயங்களாக அடையாளம்
இரண்டு நாட்களுக்கும் மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக வைத்திய ஆலோசனையை நாடுமாறு நாட்டு மக்களுக்கு அவசர அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், டெங்கு காய்ச்சல் கோவிட்டை போல் இல்லை. சமூக இடைவௌியை கடைபிடிப்பதால் அதில் இருந்து பாதுகாப்பு பெற முடியாது எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை நாட்டில் டெங்கு அபாயமிக்க வலயங்களாக 10 மாவட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தேசிய டெங்கு ஒழிப்பு பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் ஹிமாலி ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 19 மணி நேரம் முன்
Tamizha Tamizha: காதலித்த கணவருக்கு கண்முன் நடந்த இரண்டாவது திருமணம்! 14 ஆண்டுகளாக குறையாத காதல் Manithan
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam