ஓட்டமாவடியில் கொரோனா பாதிப்பால் சில வீதிகளுக்கு தற்காலிக பூட்டு!

Independent Writer
in மருத்துவம்Report this article
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளதால் மூன்று வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளார்.
ஓட்டமாவடி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் மூலம் கொரோனா தொற்றாளர்கள் ஏழு பேர் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து மக்களின் பாதுகாப்பு கருதிக் குறித்த நடவடிக்கை சுகாதாரப் பிரிவினரால் இடம்பெற்றுள்ளது.
இதில் ஓட்டமாவடி முதலாம் வட்டார கிராம சேவகர்பிரிவுக்குட்பட்ட பழைய மக்கள் வங்கி வீதி, கே.பீ.ஹாஜியார் வீதி, மௌலானா வீதி ஆகிய மூன்று வீதிகளே இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஓட்டமாவடி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் மூலம் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து ஆறு நபர்களுக்கும், வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிண்ணையடி பகுதியில் உள்ள ஒரு நபருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் ஓட்டமாவடியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் இவரது குடும்பத்தாருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் மூலம் மேற்படி நபர்களுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஓட்டமாவடி பிரதேசத்தில் கொரோனா தொற்று இனங்காணப்பட்டவர்களின் வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், மூடப்பட்ட வீதிகளில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.







ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்: ரிஷி சுனக் உட்பட பலர் விசாரணைக்குட்படுத்தப்படலாம் News Lankasri
