ராஜபக்சவினர் எங்களது வம்சாவளியினர்: தமிழ்நாடு காமாட்சி நாயுடு
இலங்கையில் நாயக்க என்ற குடும்ப பெயர்களை கொண்டுள்ளவர்கள், தெலுங்கு நாயுடு வம்சாவளியினர் எனவும் ராஜபக்சவினரும் தெலுங்கு வம்சாவளியை சேர்ந்தவர்கள் எனவும் தமிழ் நாடு நாயுடு பேரவையின் தலைவர் காமாட்சி நாயுடு தெரிவித்துள்ளார்.
தமிழ் வலையொளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
பண்டாரநாயக்க என்ற பெயரில் இருக்கும் பண்டார என்பது தமிழில் இருக்கும் பண்டாரம் என்ற பெயர்களை கொண்ட மக்களை குறிக்கும். பண்டாரம் என்பவர் அம்மன் கோயில் ஒன்றில் பூசாரியாக இருந்தார். அவரது பெண்ணை இலங்கைக்கு மணம் முடித்து கொடுத்தனர்.
இலங்கை சென்றது, இந்த பெண்ணின் கணவன் இறந்து போகிறார். இதன் பின்னர், அந்த பெண் இலங்கையில் வாழ்ந்து வருகிறார். அதன் பின்னர், அங்கு ஆட்சி செய்த நாயக்கர்களான நாயுடுகளில் ஒருவரை திருமணம் செய்த பின்னர் பண்டாரநாயக்க என்று குடும்ப பெயர் மாறுகிறது.
இலங்கையில் 1793 ஆம் ஆண்டில் எங்களது (தெலுங்கர்களின்) ஆட்சி உதயமாகின்றது. அன்றிலிருந்து இலங்கையில் நாயக்கர்களில் ஆட்சி ஆரம்பமாகிறது. எனினும் அதற்கு முன்னரே பண்டாரம் என்ற வார்த்தை இலங்கைக்கு சென்று விட்டது.
பண்டாரம் என்ற குடியிலேயே திருவள்ளுவர் பிறந்ததாக கூறுகின்றனர். அது உண்மையாகவும் இருக்கலாம். ஏன் என்றால், அவர்கள் மிகவும் திறமையானவர்கள். பட்டியலின வகுப்புகளில் இவர்கள் சற்று மாறுப்பட்டவர்கள். இவர்கள் ஜாதகம் பார்ப்பது கோயில்களில் பூசாரிகளாக பணியாற்றுகின்றனர். பழனியில் இருக்கும் பூசாரிகள் அனைவரும் பண்டாரம் என்ற பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களில் வம்சாவளியில் வந்தவர்களே பண்டாரநாயக்கர்கள்.
சிங்க( ஸ்ரீ வீரபராக்கிரம நரேந்திர சிங்கன் ) என்ற கண்டி மன்னர் தமிழகத்தின் மதுரை நாட்டில் இருந்து இரண்டு நாயுடு பெண்களை மணம் முடித்துக்கொள்கிறார். அந்த இரண்டு பெண்களுக்கும் வாரிசுகள் இல்லை.
இதன் பின்னர் 1793 ஆம் ஆண்டில் மதுவரையில் இருந்த இந்த பெண்களின் சகோதரனை(ஸ்ரீ விஜய ராஜசிங்கன் ) கண்டிக்கு அழைத்துச் சென்று மன்னராக முடி சூடுகின்றனர்.
அதன் பின்னர் அங்கு நாயுடுக்களின் ஆட்சி அங்கு ஏற்படுகிறது. சிங்களவர்கள் அனைவருமே நாயுடுகள். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. ராஜபக்சவினரின் வம்சாவளியினரும் நூற்றுக்கு நூறு நாயுடுகளே.
இலங்கையில் இருக்கும் ராஜபக்சவினரும், இந்தியாவில் இருக்கும் நாயுடுகளின் வம்சாவளிகள் ஒரே இனத்தவர்களே. அவர்கள் நாயுடுகள் என்பதற்காக அவர்கள் செய்வது அனைத்தையும் நியாயப்படுத்தவில்லை.
அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட குற்றங்கள் முற்றிலும் தவறானது. அதனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் காமாட்சி நாயுடு தெரிவித்துள்ளார்.
தமிழ் நாடு நாயுடு பேரவையின் தலைவர் காமாட்சி நாயுடு, தெலுங்கர் முன்னேற்ற கழகம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வந்தார். அதனை பின்னர் திராவிட முன்னேற்றக் கழத்துடன் இணைத்து அந்த கட்சியில் இணைந்து செயற்பட்டு வருகிறார்.
தெலுங்கர் முன்னேற்றக் கழகம் கட்சியை ஏன் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைத்தீர்கள் என அண்மையில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்திருந்த காமாட்சி நாடு, திராவிட முன்னேற்றக் கழகம் இருப்பதால், தெலுங்கர் முன்னேற்றக் கழகம் என்ற கட்சி தேவை இல்லை எனக் கருதி,அதனை திமுகவுடன் இணைத்ததாகவும் தற்போது தமிழகத்தில் ஆட்சியில் இருப்பது தமது ஆள் என்பதால், தனியாக கட்சியை வைத்திருக்கும் அவசியமில்லை எனவும் கூறியிருந்தார்.
இலங்கையின் கண்டி ராஜ்ஜியத்தின் இறுதி சிங்கள மன்னனான ஸ்ரீ வீரபராக்கிரம நரேந்திர சிங்கனின் மறைவிக்கு பின்னர், கண்டியை மதுரையை சேர்ந்த நாயக்கர் வம்சத்தை சேர்ந்த நான்கு மன்னர்கள் ஆட்சி செய்தினர். 1739 ஆம் ஆண்டு முதல் 1747 ஆம் ஆண்டு வரை ஸ்ரீ விஜய ராஜசிங்கனும், 1747 ஆம் ஆண்டு முதல் 1782 ஆம் ஆண்டு வரை கீர்த்தி ஸ்ரீ விக்ரம ராஜசிங்கனும் 1782 ஆம் ஆண்டு முதல் 1798 ஆம் ஆண்டு முதல் ராஜாதி ராஜசிங்கனும் 1798 ஆம் ஆண்டு முதல்1815 ஆம் ஆண்டு வரை ஸ்ரீ விக்ரம ராஜசிங்கனும் கண்டியை ஆட்சி செய்தனர்.
1815 ஆம் ஆண்டு கண்டி ராஜ்ஜியத்தை பிரித்தானியர் கைப்பற்றினர்.