கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் ஆயுதம் வெடித்து பொலிஸ் அதிகாரி பலி
அலரி மாளிகைக்கு அருகில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்றமான நிலைமைக்கு இடையில் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலை நடத்த பயன்படுத்தும் ஆயுதம் வெடித்த சம்பவத்தில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
உப பொலிஸ் பரிசோதகர் கண்ணீர் புகைக் குண்டு தாக்குதலை நடத்த முயற்சித்த போது, அந்த ஆயுதம் வெடித்துள்ளதுடன் அவர் படுகாயமடைந்துள்ளார்.
தொடர்ந்தும் கண்ணீர் புகைக் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதன் காரணமாக ஆயுதம் சூடாகி காணப்பட்டதாகவும் இதன் காரணமாக அந்த ஆயுதம் வெடித்துள்ளது எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
அதேவேளை இம்மதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி. சரத் குமார உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதேச சபை தலைவரின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 16 மணி நேரம் முன்
9 நாட்களில் ரஜினியின் படையப்பா திரைப்படம் ரீ-ரிலீஸில் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam