ஆசிரிய பிரதிநிதிகள் மீது பொலிஸார் தாக்குதல்: வெளியான தகவல்
கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ஆசிரியர் இடமாற்ற சபையைச் சேர்ந்த இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
இந்த சம்பவம் நேற்று (23.02.2023) பதிவாகியுள்ளது.
நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பிக்குமாரை பொலிஸார் தாக்கிய போது அதனை வீடியோ காட்சிப்படுத்தியதற்காக அவர்கள் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் சங்கங்களின் குற்றச்சாட்டு
இலங்கை அரசாங்க ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளான நாலக சில்வா மற்றும் சமித் ஹர்ஷநாத ஆகிய இரண்டு ஆசிரியர்களுமே பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தலங்கமவில் தடுத்து வைக்கப்பட்டதாக இலங்கை அரசாங்க ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் இந்திக பரணவிதான தெரிவித்துள்ளார்.
நேற்று (23.02.2023) நள்ளிரவு வரை ஆசிரியர் இடமாற்ற சபையைச் சேர்ந்த இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, யாரையும் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
எனவே இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை பார்வையிடச் சென்றிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்றைய தினம் கல்வி அமைச்சினுள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இன்று கடுவலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
செய்தி: அனதி

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

பாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி., இந்தியக கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri
