சுற்று நிரூபத்திற்கு அமையவே ஆசிரியர்களின் ஆடைகள் மாற்றப்பட்டன! ஜோசப் ஸ்டாலின்
சுற்று நிரூபத்திற்கு அமையவே ஆசிரியர்களின் ஆடைகள் மாற்றப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியைகள் சாரி அல்லது வசதியான உடையணிந்து பாடசாலைக்கு செல்கின்றனர்.
சுற்று நிரூபம்
அரசாங்க ஊழியர்கள் வசதியான ஆடைகளை அணிந்து பணிக்கு செல்லக் கூடிய வகையில் அண்மையில் சுற்று நிரூபம் வெளியிடப்பட்டது.

இதன் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் வசதியான ஆடைகளை அணிந்து பாடசாலை செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் எப்பொழுதும் சுற்றுநிரூபங்களுக்கு அமைய செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
விரும்பிய ஆடை
ஆசிரியர்கள் வசதியான ஆடை அணிந்து கடமைக்கு வர முடி முடியும் என சுற்றிநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும், விரும்பினால் சாரியோ அல்லது வசதியான ஆடையையோ அணிந்து கடமைக்கு சமூகமளிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறெனினும் ஆசிரியர்கள் தகாத முறையில் ஆடை அணிந்து கடமைக்கு சமூகமளிக்கப் போவதில்லை என ஜோசப் ஸ்டாலின் தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வை... ஆடி மாதத்தில் எதிர்பாராத நிதி ஆதாயத்தினை பெறும் 5 ராசிகள் Manithan
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri