சுற்று நிரூபத்திற்கு அமையவே ஆசிரியர்களின் ஆடைகள் மாற்றப்பட்டன! ஜோசப் ஸ்டாலின்
சுற்று நிரூபத்திற்கு அமையவே ஆசிரியர்களின் ஆடைகள் மாற்றப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியைகள் சாரி அல்லது வசதியான உடையணிந்து பாடசாலைக்கு செல்கின்றனர்.
சுற்று நிரூபம்
அரசாங்க ஊழியர்கள் வசதியான ஆடைகளை அணிந்து பணிக்கு செல்லக் கூடிய வகையில் அண்மையில் சுற்று நிரூபம் வெளியிடப்பட்டது.

இதன் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் வசதியான ஆடைகளை அணிந்து பாடசாலை செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் எப்பொழுதும் சுற்றுநிரூபங்களுக்கு அமைய செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
விரும்பிய ஆடை
ஆசிரியர்கள் வசதியான ஆடை அணிந்து கடமைக்கு வர முடி முடியும் என சுற்றிநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும், விரும்பினால் சாரியோ அல்லது வசதியான ஆடையையோ அணிந்து கடமைக்கு சமூகமளிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறெனினும் ஆசிரியர்கள் தகாத முறையில் ஆடை அணிந்து கடமைக்கு சமூகமளிக்கப் போவதில்லை என ஜோசப் ஸ்டாலின் தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri