அடுத்தக்கட்ட போராட்டத்துக்கு தயாராகும் ஆசிரியர்கள்!
ஆசிரியர்கள் அதிபர்கள் வேதன முரண்பாடுகளை களையும் போராட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக ஆசிரியா்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் இன்று கொழும்பில் ஒன்று கூடுகின்றன.
இதனை ஆசிாியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தொிவித்துள்ளார்.
இந்த ஒன்றுக்கூடலின்போது அடுத்தகட்டப் போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்றும் ஸ்டாலின் எமது செய்திச்சேவையிடம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் ஆசிாியர்களும் அதிபர்களும், பாடசாலை நேரத்துக்கு பின்னர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.