பாடசாலை மாணவியை வன்புணர்விற்குட்படுத்த முயன்ற ஆசிரியர் கைது!
பொகவந்தலாவை பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்விற்குட்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட ஆசிரியரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கைது செய்யப்பட்ட ஆசிரியர் நேற்று(15.08.2023) பாடசாலை முடிந்தவுடன் தன்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு வருமாறு மாணவியை அழைத்துள்ளார். அவ்வாறே மாணவியும் சென்றுள்ளார்.
அதன்போதே, ஆசிரியர் அம்மாணவியை பாலியல் வன்புனர்விற்குட்படுத்த முயன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வைத்திய பரிசோதனைக்காக மாணவி, பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
You may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam