களிக்காட்டில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்
முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நெடுங்கேணி வீதியில் களிக்காடு பகுதியில் இன்று வீதியால் சென்ற டக்சி ஒன்று விவசாயி ஒருவரை மோதித்தள்ளிவிட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, காயமடைந்தவர் 1990 ற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நோளாயர் காவு வண்டி மூலம் மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதன்போது 55 அகவையுடைய கண்ணன் என்று அழைக்கப்படும் விவசாயியே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
முள்ளியவளை பகுதியினை சேர்ந்த விவசாயி விவசாய நடவடிக்கைக்காக களிக்காடு சென்ற போது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில்,விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாவட்ட மருத்துவமனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.