ரஷ்ய எரிபொருள் கொள்வனவு வரி.. ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு
ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்யவுள்ள நாடுகள் மீதான பரஸ்பர வரி விதிப்பு இன்னும் ஓரிரண்டு வாரங்களில் அறிவிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பிற்கும் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினுக்கும் இடையிலான சந்திப்பு இன்று அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் இடம்பெற்றது.
இதன்போது ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்குபவர்கள் மீதான வரிகள் பற்றி இப்போது யோசிக்கவில்லை என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப் - புடின் சந்திப்பு
மேலும், ரஷ்ய எரிபொருள் வாங்கும் நாடுகள் மீதான பழிவாங்கும் வரிகள் பற்றி இரண்டு அல்லது மூன்று வாரங்களில் மீண்டும் யோசிப்பேன் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
அதேவேளை, அலாஸ்காவில் ரஷ்யத் தலைவருடனான தனது சந்திப்பு மிகவும் சிறப்பாக நடந்தது என்றும், இந்த சந்திப்பு இன்று நடந்ததன் காரணமாக, நான் எரிபொருள் வரி பற்றி யோசிக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "இப்போது, நான் இரண்டு வாரங்கள் அல்லது மூன்று வாரங்கள் அல்லது ஏதாவது ஒன்றில் அதைப் பற்றி யோசிக்க வேண்டியிருக்கலாம், ஆனால் இப்போது அதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியதில்லை. சந்திப்பு மிகவும் சிறப்பாக நடந்தது என்று நினைக்கிறேன்." என்றுள்ளார்.
எரிபொருள் இறக்குமதி
2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை ரஷ்யாவில் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்ய ஆரம்பித்தது.
மேலும் 2025 ஆம் ஆண்டில் தொடர்ந்து இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளுடன் மேலும் கொள்முதல் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தது.
ரஷ்யா ஏற்கனவே 2022ஆம் ஆண்டில் இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி பங்காளியாக இருந்தது, மேலும் அதன் எரிபொருள் பற்றாக்குறையைக் குறைக்க ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் எண்ணெயை வழங்கியது.




