உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தராகி சிவராமின் நினைவேந்தல் (PHOTOS)
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவாரம் அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.
மட்டக்களப்பு காந்தி பூங்காவிலுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவு தூபியில் இன்று (29.04.2023) அஞ்சலி செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாள் சங்க தலைவர்வா. கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற இந் நினைவேந்தலில் ஊடகவியலாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன் மற்றும் சிவில் அமைப்பினர் கலந்துகொண்டு அன்னாரது உருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
செய்தி: பவன்
மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலயத்தில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் த.சிவராம் 18 வது ஆண்டு நினைவேந்தல் இன்று சனிக்கிழமை (29) கட்சி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் எழுச்சி பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பபாணம்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
ஊடகவியலாளர்களான சிவராமனின் 18ஆம் ஆண்டு நினைவு தினமும் , ரஜீவர்மனின் 16ஆம் ஆண்டு நினைவு தினமும் யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் நினைலுக்கூரப்பட்டது.
ஊடகவியலாளரான தராக்கி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து வெள்ளை வானில் வந்த அடையாளந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு , படுகொலை செய்யப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டார்.
ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் உதயன் பத்திரிகையின் அலுவலக செய்தியாளராக கடமையாற்றி வந்த வேளை கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் திகதி காலை 10 மணியளவில் ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.
செய்தி: தீலிபன்
முதலாம் இணைப்பு
ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராமின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (28.04) மாலை உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.
ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி காவல் நிலையத்திற்கு அருகில் வைத்து அடையாளம் தெரியாதவர்களால் வெள்ளை வானில் கடத்தப்பட்ட பின்னர் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவரது சடலம் நாடாளுமன்றத்துக்கு அருகில் மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் திருவுருவப்படத்திற்கு மெழுவர்த்தி ஏத்தியும், மலர்தூபியும் அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.
வவுனியா
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 18 ஆவது நினைவுதினம் வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று (28.04.2023) அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது தராக்கியின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து, ஒளிதீபம் ஏற்றி அஞ்சலி செய்யப்பட்டது.
அத்துடன், ஊடகவியலாளர் தராக்கி சிவராம் அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று (28.04.2023) இடம்பெற்றது.
வவுனியா ஊடக அமையத்தின் தலைவர் ப.கார்த்தீபன் தலைமையில் அமையத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற நினைவேந்தலில் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு ஊடகவியலாளர் தராக்கி சிவராம் அவர்களின் படத்திற்கு மெழுவர்த்தி ஏத்தியும், மலர்தூபியும் அஞ்சலி செலுத்தினர்.
இதன்பின் சிரேஸ்ட ஊடகவியலாளர் ந.கபிலநாத் மற்றும் வவுனியா ஊடக அமையத்தின் செயலாளர் கி.வசந்தரூபன் ஆகியோரினால் தராக்கி சிவராம் தொடர்பில் நினைவு உரைகளும் இடம்பெற்றன.
இதன்போது, தராக்கி சிவராம் கொலை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவரது கொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை எனவும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் நீதியான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் அதற்கு தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளும் நாடாளுமன்றம் ஊடாக அழுத்தம் கொடுக்க வேண்டும் ஊடகவியலாளர்கள் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
அத்துடன், தற்போது நடைமுறைப்படுத்தவுள்ள புதிய பயங்கரவாத தடைச்சட்டமும் ஊடகவியலாளரின் செயற்பாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அதற்கு எதிராக ஊடகவியலாளர்கள் ஒன்றுபட்டு போராட வேண்டிய தேவை எழுந்துள்ளது எனவும் புதிய பயங்கரவாத தடைச் சட்ட வரைபை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் ஊடகவியலாளர்கள் இதன்போது கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.












ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
