ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பலொன்றை அதிரடியாக தாக்கிய IRGC
ஹோர்முஸ் நீரிணையில் இருந்த எண்ணெய்க் கப்பலொன்று, ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரண்டு துப்பாக்கிப் படகுகளால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
பிரித்தானிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) கண்காணிப்பு மையம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு
இந்தச் சம்பவம் ஓமானுக்கு வடகிழக்கே 20 மைல் (32 கி.மீ.) தொலைவில் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எண்ணெய்க் கப்பலும் அதன் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என UKMTO மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேபோல், ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்றபோது குறைந்தது இரண்டு வர்த்தகக் கப்பல்கள், துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam