பின் சிந்தனையின் அடிப்படையில் நடத்தப்படும் தமிழர்கள்! - சுமந்திரன் எம்.பி ஆதங்கம்
இலங்கையில் தமிழர்கள் பின் சிந்தனையின் அடிப்படையிலேயே நடத்தப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்பின் 13வது திருத்த கீழ் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச சர்வதேசத்திடம் கூறியுள்ளார்.
அப்படியானால் இந்த நீதித்தறையின் அதிகாரங்களும் மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு செய்யும் போது மத்திய அரசாங்கம் மாகாண அதிகாரங்களில் தலையீடு செய்யும் வகையிலேயே ஒரே நாடு ஒரே சட்டம் அமையும். எனவே சுயமரியாதை கொண்ட தமிழர்கள் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் அங்கம் வகிக்கமாட்டார்கள்.
அந்த வகையில் குறித்த செயலணிக்கு தமிழர்கள் முன்னதாக தெரிவுசெய்யப்பட்டாத நிலையில், பின் சித்தாந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே இலங்கையில் தமிழர்கள் பின் சிந்தனையில் அடிப்படையிலேயே நடத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan