இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டு சித்திரவதைக்கு உள்ளான தமிழருக்கு சுவிசில் இழப்பீடு கோரி வழக்கு

Sri Lankan Tamils Tamils Switzerland
By Parthiban Feb 18, 2025 05:05 PM GMT
Report

சுவிட்சர்லாந்தில் புகலிடம் மறுக்கப்பட்டு இலங்கைக்கு திரும்பிச் சென்று 2022ஆம் ஆண்டு மீண்டும் சித்திரவதைக்கும் பாலியல் வன்முறைக்கும் உட்பட்ட தழிழர் ஒருவருக்காக சுவிட்சர்லாந்து சட்டத்தரணிகள் இழப்பீடு கோரி வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளனர்.

பீற்றர் மோறோ எஸ் ஏ (Peter & Moreau SA) என்ற சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த எமா லைடென் மற்றும் பெனடிக்ட் டி மோர்லூஸ் (Emma Lidén மற்றும் Bénédict de Moerloose) ஆகியோர் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்துடன் (ITJP) இணைந்து தாக்கல் செய்துள்ள இந்த வழக்கானது சுவிட்சர்லாந்து தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்குப் பலவந்தமாக திருப்பி அனுப்புவதை உடனடியாக இடைநிறுத்த வேண்டும் எனவும் துன்புறுத்தலின் நிரூபிக்கப்பட்ட முழுமையான ஆபத்தினைக் கருத்திற் கொண்டு நிலுவையிலுள்ள அனைத்து விண்ணப்பங்களையும் மீள்பரிசீலனை செய்யவேண்டும் எனவும் சுவிட்சர்லாந்தினைக் கேட்டுள்ளது.

“அந்த நேரத்தில் எமது கட்சிக்காரரினால் இலங்கைக்கு அவர் திருப்பி அனுப்பப்பட்டால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் காட்டும் பலமான ஆதாரங்கள் சுவிட்சர்லாந்தின் குடியகல்விற்கான அரச செயலகத்திடம் (SEM) இருந்தது. அவர்கள் துன்புறுத்தலுக்கான ஆபத்தினை ஆராய மறுத்துவிட்டார்கள்.

சாமர சம்பத்தால் சபையில் இன்று சிரிப்பும் சலசலப்பும்!

சாமர சம்பத்தால் சபையில் இன்று சிரிப்பும் சலசலப்பும்!

இழப்பீட்டுத் தொகை  

கட்சிக்காரரின் கோப்பில் இருந்த புதிய மற்றும் எச்சரிக்கும் தகவல்களையும், மனஉளைச்சலின் அவரது தெளிவான வெளிப்படுத்தல்களையும் புறக்கணித்ததன் மூலம் அவர் இலங்கைக்கு திரும்பிச் சென்ற பின்னர் மீண்டும் கடுமையாக பாதிக்கப்படும் நிலைக்கும் மீண்டும் உளநிலை பாதிக்கப்படும் நிலைக்கும் அவரை அவர்கள் ஆளாக்கியுள்ளார்கள்” என எமா லைடென் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டு சித்திரவதைக்கு உள்ளான தமிழருக்கு சுவிசில் இழப்பீடு கோரி வழக்கு | Tamils Were Been Tortured Compensation Case Swiss

இந்த வழக்கானது இ.எஸ் இற்கு ஏற்பட்ட தார்மீக பாதிப்புகளுக்காக 150,000 சுவிஸ் பிராங்குகளை இழப்பீடாக கேட்பதுடன் சித்திரவதைக்கு எதிரான தீர்மானம் மற்றும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தின் கீழான கடப்பாடுகளுக்கு இணங்க சுவிட்சர்லாந்து அவரது வழக்கினை சரியான முறையில் பரிசீலிக்கத் தவறிவிட்டது என வாதிடுவதுடன் குடியகல்விற்கான அரச செயலகத்தினை அதற்கு பொறுப்பாளியாக்கிறது.

“ஐரோப்பிய நாட்டிலிருந்து இலங்கைக்கு தமிழர் ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டு அதன் பின்னர் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதை நான் பார்ப்பது இ.எஸ் இன் வழக்கில் மட்டுமல்ல.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குடும்பத்தின் பாதுகாப்பு 

புகலிடக்கோரிக்கையினை ஆராயும் அதிகாரிகள் வாழ்வு மற்றும் சாவு சம்பந்தமான வழக்குகளை கையாளுகின்றார்கள். அத்துடன் இந்த வழக்குகள் ஆராய்வதற்கு சிக்கலானதாக இருப்பினும் அவர்கள் அந்த வேலையினை மிகவும் கவனத்துடன் செய்வது அவசியமானதாகும்” என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டு சித்திரவதைக்கு உள்ளான தமிழருக்கு சுவிசில் இழப்பீடு கோரி வழக்கு | Tamils Were Been Tortured Compensation Case Swiss

தனது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக தன்னை வெளிக்காட்ட விரும்பாத இந்த நபரான, இ.எஸ் தற்போது ஐக்கிய இராச்சியத்தில் இருக்கிறார். அங்கு அவருக்கு 2024 இன் பிற்பகுதியில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தில் அந்த செயல்முறையின் ஒரு பகுதியாக இ.எஸ் தனக்கு நடந்த சம்பவத்தை உறுதிப்படுத்தும் ஒரு சுயாதீன சட்ட வைத்திய அறிக்கை ஒன்றினைப் பெற்றிருந்தார். 

இவ்வாறான ஒன்றினை சுவிட்சர்லாந்தில் பெற்றுக் கொள்ளமுடியாது. அவர் ஐக்கிய இராச்சியத்தில், உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தினால் நடாத்தப்பட உளவியல் சமூக ஆதரவு செயற்திட்டத்திலும் இணைந்து கொண்டார். போதிய நிதி உதவி இன்மையால் இந்த ஆதரவுச் செயற்திட்டம் மூடப்படும் நிலையை எதிர்நோக்கியுள்ளது. 

சீனா கடற்றொழிலாளர்களை பயன்படுத்தி இந்தியாவை அச்சுறுத்த முடியாது: யாழ். மாவட்ட கடற்றொழில் சம்மேளனம் தெரிவிப்பு!

சீனா கடற்றொழிலாளர்களை பயன்படுத்தி இந்தியாவை அச்சுறுத்த முடியாது: யாழ். மாவட்ட கடற்றொழில் சம்மேளனம் தெரிவிப்பு!

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Parthiban அவரால் எழுதப்பட்டு, 18 February, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Kuching, Malaysia, கொழும்பு, சுழிபுரம், London, United Kingdom, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய், Jaffna, கலிஃபோர்னியா, United States

22 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Maur-des-Fossés, France

18 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு 5

23 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Scarborough, Canada

24 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டி, தெல்லிப்பளை, Toronto, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Walthamstow, United Kingdom

20 Dec, 2025
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, உரும்பிராய் மேற்கு

22 Dec, 2015
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Markham, Canada

19 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Seattle, United States

17 Dec, 2025
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

16 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

புத்தூர், அச்சுவேலி

18 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US