பிரித்தானியாவில் ஈழத்தமிழர்கள் மாபெரும் போராட்டம்
இலங்கையில் தமிழர்களை வதைத்த கறுப்பு ஜூலையின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயகம் மட்டுமல்லாது தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களிலும் இன்றைய தினம் நினைவு கூரப்படுகின்றது .
அந்த வகையில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் பகுதிகளிலும் தற்போது கறுப்பு யூலையை நினைவு கூர்ந்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23 ஆம் திகதி முதல் சில வாரங்கள் இலங்கையின் பல பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நிலையில்,இதனை கறுப்பு ஜுலை கலவரம் அல்லது 83 கலவரம் என்றும் அடையாளப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.