புலம்பெயர் நாடுகளின் அரசை ஈழத்தமிழர் நெருங்க முடியாமல் ரோவின் புதிய சதி (Video)
ஒவ்வொரு கால கட்டத்திலும் சர்வதேச ஒழுங்கில் இருக்கக்கூடிய சக்திகளான வல்லரசு சக்திகளாக இருந்தாலும் சரி பிராந்திய சக்திகளாக இருந்தாலும் அவை தங்களின் நலன்களிலே கவனம் செலுத்துகின்றது.
இவ்வாறான நிலையில் தான் ஈழ தமிழ் மக்கள் இருக்கின்றனர் என்பது முக்கியமான காரணமாகும் என கனடாவில் இருக்கக்கூடிய அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் தெரிவித்தார். அதை அவர்கள் சரியாக பயன்படுத்தாதவர்களாக இருந்தால் அவர்கள் காணாமல் போனவர்களாகவே ஆக்கப்படுவர் எனவும் இதன்போது தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் தேசிய தலைமை சொல்வது போல உலகப் பார்வை இந்து மா சமுத்திரத்தில் குவிந்திருக்கிறது. இந்த சதுரங்க விளையாட்டில் விரும்பியும் விரும்பாமலும் நாம் விளையாடித்தான் ஆக வேண்டும்.
அதே போல ஒரு கேள்வி எழுகிறது ஈழத்தமிழ் இனம் இந்த சதுரங்க விளையாட்டை அங்கு குவிந்திருக்கூடிய வல்லாதிக்க சக்திகளை மையப்படுத்தி விளையாடுகிறதா அதாவது தன்னுடைய நலன் சார்ந்து விளையாடுகிறதா என்பது எம் முன் இருக்கும் கேள்வி என்கிறார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri