பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்...! திமுக கோட்டையை தகர்க்க த.வெ.க. வகுத்த 6 கட்ட வியூகம்
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளின் படி இறுதியாக த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
தி.மு.க. கூட்டணி 74 இடங்களை பெற்றுள்ளதுடன், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களை பெற்றது. இதன் மூலம் அதிக இடங்களை பெற்ற தனிப்பெரும் கட்சியாக த.வெ.க உருவெடுத்துள்ளது.
பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை
234 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், த.வெ.க.வுக்கு, அந்த அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கப்பெறவில்லை.தற்போது த.வெ.க. பெரும்பான்மைக்கு கூடுதலாக 12 இடங்கள் தேவைப்படுகின்றது.

எனவே தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், தே.மு.தி.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. ஆகியோர் விஜய்க்கு ஆதரவு அளிப்பார்கள் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சி அமைக்கும் பணிகளில் தவெக இறங்கியுள்ளது.
இந்த வெற்றியை சாத்தியமாக்க 6 முக்கியமான திட்டங்களை தவெக வகுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
6 முக்கியமான திட்டங்கள்
அந்த வகையில், 1. தமிழகம் முழுவதும் பரவியிருந்த இலட்சக்கணக்கான இரசிகர் மன்றங்களை இரத்த தான முகாம்கள், நிவாரணப் பணிகள், மாணவர்களுக்குக் கல்வி விருதுகள் எனத் தொடர்ந்து மக்கள் மத்தியில் நேரடித்தொடர்பை உருவாக்கியுள்ளார்.
2. 2021ம் ஆண்டு கட்சி தொடங்கப்படாத நிலையிலும், ரசிகர் மன்ற நிர்வாகிகளை உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாகக் களமிறக்கினர். சுமார் 169 பேர் போட்டியிட்டதில் 115 பேர் வெற்றி பெற்று வலுவாக இருப்பதை தேர்தல் நிரூபித்துள்ளது.
3 . 2026 தேர்தலுக்கு முன்னதாக, வெறும் உற்சாகத்தை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், சரியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதில் தவெக கவனம் செலுத்தியுள்ளது.
நேர்காணல்கள், பின்னணிச் சரிபார்ப்புகள் நடத்தப்பட்டே பெரும்பாலான பொறுப்புகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
4. தவெகவுக்கு விசில் சின்னம் கிடைத்த சூழலில், அது மக்களிடையே எளிதில் சென்று சேர்ந்துள்ளது.
5. டிஜிட்டல் பரப்புரை நீண்ட காலமாகச் செயல்பட்டு வந்த வாட்ஸ்அப் குழுக்கள் தேர்தல் நேரத்தில் நேரடிப் பரப்புரைப் பாதைகளாக மாற்றப்பட்டன. மேலும், தலைமைக்குத் தகவல்கள் உடனுக்குடன் பகிரப்பட்டு இது ஒரு வலுவான தகவல் தொடர்பு களமாக மாறியுள்ளது.
ஊழல் எதிர்ப்பு, இளைஞர் நலன் உள்ளிட்டவை டிஜிட்டல் பரப்புரைகள் மூலம் இளைஞர்களிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
6. வழக்கமான பிரச்சாரங்களை தவெக தகர்த்து விஜய் என்ற ஒரு நபர் மூலமாகவே வெற்றிக்கான தகவல்களை சேர்த்துள்ளது.