அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்
புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் அவுஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வாழ்ந்து வந்த ரட்ணசிங்கம் பரமேஸ்வரன் என்ற இலங்கையின் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் மரணமானார் என்று அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலிய தமிழ் அகதிகள் கழகத்தின் பேச்சாளரான அரன் மயில்வாகனம் 48வயதான குறித்த நபரான இன்று காலை தூக்கத்திலேயே மரணமடைந்தாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வசிக்கும் மனைவி, மகன்
புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அவரின் மேன்முறையீட்டு வாய்ப்புகள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டு விட்டதாக அரன் மயில்வாகனம் குறிப்பிட்டுள்ளார்.
ரட்ணசிங்கம் பரமேஸ்வரனின் 25 வயது மகனும், மனைவியும் இலங்கையில் வசிக்கின்றனர்.
இரண்டு புகலிடக்கோரிக்கையாளர்கள் மரணம்

இதேவேளை நீண்ட நாட்களாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தமை, மற்றும் எதிர்காலம் குறித்த அச்சம் போன்றவற்றின் காரணமாக அவர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கடந்த ஒரு மாதத்தில் இரண்டு புகலிடக்கோரிக்கையாளர்கள்
மரணமடைந்தனர் என்றும் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam