அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் தமிழ் அரசியல்வாதிகள் பதவி விலக வேண்டும் - சாணக்கியன்

Srilanka Shanakiyan Batticalo
By Kumar Jun 18, 2021 07:50 PM GMT
Report

இந்த அரசாங்கத்தினால் நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப முடியாது என தாங்கள் அன்றே எதிர்வு கூறியதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ,களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இன்றைய நிலைமையை பொறுப்பேற்று அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் தமிழ் அரசியல்வாதிகளும் பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் அரசாங்கத்தின் இந்த மோசமான செயற்பாடுகளுக்கு எதிராக தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


மூன்றில் இரண்டு பங்கு கரையோர பிரதேசத்தை வைத்து மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மக்களின் நலன் கருதி இதுவரை எரிபொருள் விலை அதிகரித்ததைப் பற்றி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எந்தக் கருத்தினையும் வெளியிடவில்லை.

அன்றாடம் மீன்பிடிக்க சென்று சிறிதளவு மீனை பிடித்து விற்பனை செய்து வாழும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி இவர்கள் ஏன் சிந்திக்கவில்லையெனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

தற்பொழுது நாட்டில் விலைவாசிகள் அதிகரித்ததனூடாக கோவிட் தொற்றினால் மிகவும் சிரமத்திற்குள் வாழும் மக்கள் மத்தியில் மேலும் பல கஷ்டங்களை இந்த அரசாங்கத்தின் சில செயற்பாடுகள் காரணமாக மக்கள் அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள். பேக்கரி பொருட்களுக்கான விலைகள் இந்த வாரத்திலிருந்து ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்படவிருக்கின்றன.

எரிபொளுளை நம்பியிருக்கும் அனைத்து துறைகளும் 15 ரூபாவினால் விலை அதிகரிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. பிரிமா நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலையானது மூன்று ரூபா ஐம்பது சதத்தினால் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த சில மாதங்களுக்குள் அரிசியின் விலையானது 27 ரூபா தொடக்கம் 46 ரூபா வரை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. தேங்காய் எண்ணெயின் விலையானது 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. பருப்பின் விலை 36 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

இதன் காரணமாக மக்கள் பல சிரமத்திற்குள் வாழும் பொழுது இலங்கை அரசாங்கத்தினால் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. 92 ஒக்டெயின் 20 ரூபாவாலும், 95 ஒக்டெயின் 23 ரூபாவாலும் ,டீசல் 7 ரூபாவாலும் ,சுப்பர்டீசல் 12 ரூபாவாலும் ,மண்ணெண்ணெய் 7 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நாட்டிலே விஷேடமாக வடகிழக்கிலே வாழும் மக்கள் மத்தியிலே இலங்கையின் நிலப்பரப்பில் கரையோரப் பிரதேசங்களில் மூன்றில் இரண்டு பங்கானது தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களாகும். மீன்பிடிக்கான கபினட் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  ஒரு தமிழர் ஆவார்.

மூன்றில் இரண்டு பங்கு கரையோர பிரதேசத்தை வைத்து மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மக்களின் நலன் கருதி இதுவரை எரிபொருள் விலை அதிகரித்ததைப் பற்றி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எந்தக் கருத்தினையும் வெளியிடவில்லை. அன்றாடம் மீன்பிடிக்க சென்று சிறிதளவு மீனை பிடித்து விற்பனை செய்து வாழும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி இவர்கள் ஏன் சிந்திக்கவில்லை.

இன்று விவசாயிகளுக்கு பசளையில்லை. யூரியா பையொன்று 5000 ரூபாவாக காணப்படுகின்றது. விவசாயத்தை நம்பி வாழும் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமல்ல ,கடந்த தேர்தல்களில் தமிழ் மக்களின் வாக்குகளை சேகரித்து அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் என்பதற்காக இவ்வாறான விலைவாசிகளை நாங்கள் குறைப்போம், மீனவக் குடும்பங்களுக்கும் விவசாயிகளுக்கும் நல்லதொரு எதிர்காலத்தை அமைப்போம் எனக்கூறி செயற்பட்ட அனைவரும் இதற்கு பொறுப்புக் கூறவேண்டும்.

அவர்களெல்லாம் பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் அரசாங்கத்தின் இந்த மோசமான செயற்பாடுகளுக்கு எதிராக தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். இந்த நாட்டின் பொருளாதாரத்தை இந்த அரசாங்கத்தினால் கட்டியெழுப்ப முடியாது என்பதை நாங்கள் அன்றே சொன்னோம்.

மனித உரிமைகளை மதிக்காது, கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுத் தராது இந்த அரசாங்கமானது தனித்து செயற்பட முடியாது. அண்மையில் ஐரோப்பிய பாராளுமன்றத்தினால் எடுக்கப்பட்ட விஷேட தீர்மானத்தினூடாக அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினைக்கு ஒரு தீர்வை வழங்காமல் அனைத்து நாடுகளையும் பகைத்துக்கொண்டு இலங்கையில் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வினை வழங்காமல் முன்செல்ல முடியாது.

அந்த தீர்வினை வழங்க விரும்பிய கட்சிக்கு வாக்களியுங்கள் என்று நாங்கள் கேட்டிருந்தோம்.ஆனால் நாங்கள் விலைவாசிகளை குறைப்போம்,மக்களின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவோமென்று பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அரசாங்கத்திற்கு வாக்குசேகரித்த ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் அவர்களுக்கு வாக்கு சேகரித்த ஒவ்வொரு பிரதிநிதியும் இதற்கு உடனடியாக தங்களது கண்டனங்களை தெரிவிக்க வேண்டும்.

இந்த அரசாங்கத்தினைப் பொருத்தவரையில் அன்றாடம் உழைத்துவாழ்க்கை நடாத்தும் மக்கள் தொடர்பில் சிந்திக்காத அரசாங்கமாகவே இருக்கின்றது.இன்றைய பயணத்தடையின் போது சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள் பயணிக்கும் நிலை காணப்படுகின்றது.ஆனால் பொதுப்போக்குவரத்தினை பயன்படுத்துபவர் மட்டுமே எந்தவித போக்குவரத்தினையும் செய்யமுடியாத நிலையுள்ளது.

கோடிக்கணக்காக உழைக்கும் கம்பனிகளுக்கு விசேட பாஸ்கள் வழங்கப்பட்டு அவர்கள் உழைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.ஆனால் சிறிய தொழில் முயற்சியாளர்களுக்கு அந்த வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

இந்த அரசாங்கமானது பெரியபெரிய கம்பனிகளுக்கான அரசாங்கமாகவே செயற்படுகின்றது.ஊழலில் மிகவும் உயர்ந்த இடத்தில் உள்ள அரசாங்கமாகவே இந்த அரசாங்கம் இருக்கின்றது.இவ்வாறான ஒரு கஸ்ட நிலையிலேயே இந்த நாட்டில் தமிழ் மக்களும் வாழ்கின்றனர்.

தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி என்பது தங்களது ஆதரவாளர்களுக்கு மண் அனுமதிப்பத்திரம் வழங்குவதும் இரண்டு மூன்று பாதைகளை புனரமைத்துவிட்டு அதனை வைத்து பூச்சாண்டி காட்டுவதல்ல.மக்களின் அன்றாட நிலைமைகள் குறித்தும் அரசாங்கத்துடன் இருப்பவர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

17 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Vaughan, Canada

28 Dec, 2025
மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு, இணுவில், Scarborough, Canada

31 Dec, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி கிழக்கு, East Gwillimbury, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Montreal, Canada

28 Dec, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, முள்ளியான், Scarborough, Canada

29 Dec, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

25 Dec, 2025
நன்றி நவிலல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

அல்லாரை, சுவிஸ், Switzerland, London, United Kingdom

28 Dec, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வட்டக்கச்சி, யாழ்ப்பாணம், Brompton, Canada, திருநெல்வேலி கிழக்கு

28 Dec, 2025
நன்றி நவிலல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், ருலூசெ, France

01 Jan, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France, London, United Kingdom

31 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, அமெரிக்கா, United States, அவுஸ்திரேலியா, Australia, தொண்டைமானாறு, கொழும்பு

31 Dec, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், Frankfurt, Germany

27 Dec, 2025
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மடிப்பாக்கம், India

01 Jan, 2025
மரண அறிவித்தல்

முள்ளியவளை, கரைச்சிக்குடியிருப்பு, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு

29 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany

31 Dec, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Aachen, Germany, Toronto, Canada

31 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, சுதுமலை கிழக்கு

30 Dec, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுவைதீவு, கிளிநொச்சி, பிரான்ஸ், France

18 Dec, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி, Bobigny, France

27 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

29 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

29 Dec, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், மாவிட்டபுரம், கிளிநொச்சி, Toronto, Canada

26 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, தமிழீழம், வைரவபுளியங்குளம், தமிழீழம்

22 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, கொழும்பு

29 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், சுவிஸ், Switzerland, London, United Kingdom

11 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Mississauga, Canada

31 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US