இந்தியாவின் துணை ஜனாதிபதியுடன் முக்கிய சந்திப்பு நடத்திய தமிழ் அரசியல் தரப்பினர்
இந்தியாவின் துணை ஜனாதிபதி சி. பி. இராதாகிருஷ்ணனை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் பிரமுகர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த சந்திப்பானது, நேற்றைய தினம், மாலை கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
முக்கிய சந்திப்பு
இந்த சந்திப்பில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் (TNPF) நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இக்கலந்துரையாடல் தொடர்பில் தமிழ்த்தேசிய மறுமலர்ச்சி இயக்கம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில்,
"இத்தகைய உயர்மட்ட இராஜதந்திர வருகைகளின் போது, எமது வடக்கு-கிழக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நீண்டகாலப் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்படும் என்பதே தமிழ் மக்களின் முதன்மையான எதிர்பார்ப்பாகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.