ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள்: கடற்றொழில் பிரதிநிதி சுட்டிக்காட்டு
இவ்வருடம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீறுகொண்டு எழுவார்கள் என வடமாகாண கடற்றொழில் பிரதிநிதி அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், கருத்து தெரிவித்த அவர், “வடக்கு கிழக்கு மாகாணங்களில் தற்போது நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலிலே தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற தமிழ் சிவில் சமூக அமைப்புகள் எடுத்த முயற்சியிலே வடக்கு - கிழக்கு பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழர்களாக வாழ விரும்புகின்றவர்களும், எங்களுடைய ஏதிர்கால வரலாற்றை கருத்தில் கொண்டு இந்த பொது வேட்பாளர் என்கின்ற இந்த தீர்மானத்தை முன்னகர்த்திக் கொண்டிருக்கின்றோம்.
இதிலே பல வாதப்பிரதிவாதங்களை வெளியிலிருந்து வைக்கின்றார்கள்.
நாங்கள் ஒரு சிவில் அமைப்பாக கேட்பது என்னதான் இருந்தாலும் பெட்டி மாற்றுவதோ அல்லது பெட்டி கொடுப்பதோ என்னவாக இருந்தாலும் பொது வேட்பாளர் என்கின்ற மேடைக்குள் வாருங்கள்” என்றார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |