தமிழ் தேசியத்துக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களை போதையால் கொச்சைப்படுத்த வேண்டாம்!
தமிழ் தேசியத்துக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களை போதையால் கொச்சைப்படுத்தி விட வேண்டாம் என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் போராளிகள் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டார்கள் என பகிரங்கமாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது.
அத்தோடு, தமிழீழ விடுதலைப்புலிகள் தமது பொருளாதாரத்தை சரி செய்வதற்காக இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கலாம் எனவும் சந்தேகம் இருக்கின்றது.
மேலும், தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்திலே யாழ்ப்பாணம் ஒழுக்கத்திலே சிறந்து விளங்கியதாகவும், போதைப்பொருள் மாபியா அந்தக் காலத்திலே இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் முழுமையான விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க...