கனடாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள தமிழர்
கனடாவில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவர் நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட குகதீஸ்வரன் துரைசிங்கம் என்பவரே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2010ஆம் ஆண்டு MV Sun Sea கப்பலில் கனடாவுக்கு சென்ற நிலையில், கடந்த 16 வருடங்களாக அவரின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வருகிறது.
புகலிட கோரிக்கை
திட்டமிட்ட வகையில் அவரின் புகலிட கோரிக்கையை நிராகரிக்கும் நோக்கில் போலியான ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்டவர் சார்பில் முன்னிலையாகி உள்ள சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

தற்போது மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள குகதீஸ்வரனை எதிர்வரும் 16ஆம் திகதி நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை கனேடிய குடிவரவு அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளதாக மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
குகதீஸ்வரனை கடந்த 16 வருடங்களாக நாடு கடத்தும் முயற்சியில் கனேடிய அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri