தமிழர் தாயகத்தில் ஆரம்பமான மாவீரர் வாரம்!

Tamils University of Jaffna Eastern Province Northern Province of Sri Lanka Maaveerar Naal
By Independent Writer Nov 21, 2025 03:18 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

வடக்கு, கிழக்கில் பல இடங்களில் மாவீரர் வார ஆரம்ப நாள் நிகழ்வுகள் இன்று(21) நடைபெற்று வருகின்றன.

புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் வார ஆரம்ப நாள் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

தமிழர்களின் உரிமைக்காக,  தமிழீழ இலட்சியத்துக்காக விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து போராடி வீரகாவியமான மாவீரர்களை நினைவுகூர்ந்து தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் நவம்பர் 21 முதல் 27 வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

செய்தி- ராகேஷ்

யாழ்ப்பாணம்

மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நினைவேந்தல் நிகள்வுகள் இன்று(21) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் குறித்த நினைவேந்தல் இடம்பெற்றது.

தமிழர் தாயகத்தில் ஆரம்பமான மாவீரர் வாரம்! | Tamil Maaveerar Naal 2025 In Jaffna

தேச விடுதலைக்காக கள முனையில் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் இன்று வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்றது.

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தின் தீவக நினைவேந்தல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று ஈகச் சுடரேற்றப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்று 21 ஆம் திகதி ஆரம்பமாகும் குறித்த மாவீரர் வாரம் எதிர்வரும் 27 ஆம் திகதி மாலை 6.00 மணியளவில் நூற்றுக்கணக்கான உறவுகளின் பங்கேற்புடன் இறுதி நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ளது.

செய்தி-தீபன்

நிகழ்வுகள் 

இதனிடையே நாளை காலை 9.30 மணியளவில் தீவகத்தில் வாழும் மாவீரர்களின் உறவுகள் உரித்தாளிகள் மதிப்பளித்து கௌரவம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

தமிழர் தாயகத்தில் ஆரம்பமான மாவீரர் வாரம்! | Tamil Maaveerar Naal 2025 In Jaffna

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் பொது விளையாட்டரங்கின் திறந்தவெளி அரங்கில் குறித்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

கோப்பாய்

யாழ்ப்பாணம் கோப்பாய் துயிலுமில்லத்தின் மாவீரர் வாரத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது.

கோப்பாய் துயிலுமில்லம் காணப்பட்ட பகுதியில் இராணுவ முகாம் அமைந்துள்ள நிலையில் அதன் வாயிலில் சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டது.

தமிழர் தாயகத்தில் ஆரம்பமான மாவீரர் வாரம்! | Tamil Maaveerar Naal 2025 In Jaffna

அதனைத் தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களின் தற்போதைய கல்லறை அமைந்துள்ள இடத்தில் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

பிரதான ஈகைச்சுடரினை இரண்டு மாவீரர்களின் தாயார் ஏற்றி வைத்தார். பின்னர் மாவீரர்களின் பெயர்கள் அடங்கிய நினைவு பெயர்ப்பலகைகள் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

செய்தி-தீபன்

வலிகாமம்

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் உணர்வு பூர்வமாக மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டது.

சபையின் ஏற்பாட்டில் மானிப்பாய் நகர் முழுவதும் சிவப்பு மஞ்சள் கொடி கட்டப்பட்டதுடன் சபை அலுவலகம் முன்பாகவே விசேடமாக அமைக்கப்பட்ட வளாகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

தமிழர் தாயகத்தில் ஆரம்பமான மாவீரர் வாரம்! | Tamil Maaveerar Naal 2025 In Jaffna

அஞ்சலி நிகழ்வை தொடர்ந்து ஏற்றிய தீபங்களுடன் சபைக்கு பிரசன்னமான உறுப்பினர்கள் அங்கும் அஞ்சலி செலுத்தினர்.

பிரதிநிதித்துவப்படுத்தும் 28 உறுப்பினர்களில் ஈ.பி.டி.பி சார்பில் இருவரும் தேசிய மக்கள் சக்தி சார்பில் ஒருவரும் மாத்திரமே இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

செய்தி-தீபன்

வடமராட்சி  

யாழ்ப்பாணம் வடமராட்சி சுப்பர்மடம் பகுதியில் மாவீரர் வாரத்தை முன்னிட்டு குருதிக்கொடையளிக்கும் நிகழ்வு இன்று காலை 9:00 மணியளவில் சுப்பர் மடம் பொது மண்டபத்தில் இடம் பெற்றது.

குருதியினை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை குருதி வங்கி பிரிவினர் பெற்றுக்கொண்டனர்.

தமிழர் தாயகத்தில் ஆரம்பமான மாவீரர் வாரம்! | Tamil Maaveerar Naal 2025 In Jaffna

இதேவேளை மாவீரர் வாரத்தின் தொடக்க நாளான இன்று மாவீரர் நினைவேந்தல் கொட்டகை அமைக்கப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் இடம் பெற்றது.

இதில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி நிகழ்வுகளும் இடம் பெற்றன. இதில் பருத்தித்துறை நகரசபை சபை தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல், மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தினர். 

செய்தி-காண்டீபன்

உடுத்துறை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் இன்று மாவீர் வார நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இன்றைய மாவீரர் வார ஆரம்ப நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறுவினர்கள் என பலரும் கலந்துகொண்டு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தமிழர் தாயகத்தில் ஆரம்பமான மாவீரர் வாரம்! | Tamil Maaveerar Naal 2025 In Jaffna

செய்தி-காண்டீபன்

கொக்கட்டிச்சோலை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கனடா வாழ் உறவுகளின் பேராதரவுடன் மாவீரர் பெற்றோர்கள், மாவீரர் குடும்ப உறவுகள் மதிப்பளித்தல் நிகழ்வு இன்றைய தினம் கொக்கட்டிச்சோலையில் இடம்பெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள், மாவீரர் பெற்றோர்கள், குடும்ப உறவுகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழர் தாயகத்தில் ஆரம்பமான மாவீரர் வாரம்! | Tamil Maaveerar Naal 2025 In Jaffna

இதன் போது மாவீரர் பெற்றோர்கள் குடும்ப உறவுகள் மங்கல வாத்தியங்கள் சகிதம் அழைத்து வரப்பட்டதுடன், தமிழ் மக்களின் அடிப்படை உரிமை மற்றும் அரசியல் அபிலாசைகளை முன்நிறுத்தி தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் முகமாக இரண்டு மாவீரர்களை ஈன்ற தாய் ஒருவரால் பிரதான ஈகைச் சுடரேற்றப்பட்டது.

 பின்னர், மாவீரர் பெற்றோர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கு விருந்தோம்பும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதுடன், பழமரக் கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்தி-குமார்

வவுனியா

மாவீரர் நினைவு வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாவீரர் நினைவு நாளின் வாரத்தின் முதலாவது நாளான இன்று (21.11) மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது.

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள அவர்களுடைய அலுவலகத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

தமிழர் தாயகத்தில் ஆரம்பமான மாவீரர் வாரம்! | Tamil Maaveerar Naal 2025 In Jaffna

இதன் போது மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு தீபமேற்றியதுடன் மலர் அஞ்சலியும் செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் முன்னாள் போராளிகள், சமூக அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மாவீரர்கள் நினைவாக அஞ்சலி செலுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தி-திலீபன்

முல்லைத்தீவு 

முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களினை நினைவு கூர்ந்து ஈகைச்சுடர் ஏற்றிஅஞ்சலி செலுத்தி மாவீரர் எழுச்சி வாரம் இன்றையதினம் (21.11.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் போது மாவீரர்களின் உரித்துடையோர்கள் , ஏற்பாட்டு குழுவினர், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலியினை செலுத்தியிருந்தனர்.

அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, ஆண்டுதோறும் நடாத்தப்படுகின்ற எங்களுக்காக உயிரை தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூர்ந்து கார்த்திகை 27 இதே முல்லைத்தீவு கடற்கரையிலே நடைபெற இருக்கின்றது.

தமிழர் தாயகத்தில் ஆரம்பமான மாவீரர் வாரம்! | Tamil Maaveerar Naal 2025 In Jaffna

குறித்த கடற்கரை கரைதுறைப்பற்று பிரதேச சபைக்குரியதாக இருக்கின்றதனால் கடற்கரையை பயன்படுத்துவதற்கு பிரதேச சபையின் தபிசாளரிடம் முன் அனுமதி பெற்றிருக்கின்றோம்.

கார்த்திகை 25,26,27 ஆகிய மூன்று நாட்களும் கடற்கரையில் நாங்கள் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே அனைவரும் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் இவ் நாளில் வருகை தந்து நினைவஞ்சலியை மேற்கொள்ள முடியும் என தெரிவித்தனர்.

புதுக்குடியிருப்பு

21 ம் திகதியிலிருந்து 27 ம் திகதி வரையான காலப்பகுதி வரை புதுக்குடியிருப்பு நகர் பகுதியானது மாவீரர் தின நிகழ்வுகளோடு இணைந்து செயற்படும் என புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் த.நவநீதன் தெரிவித்தார்.

இன்றையதினம் (21.11.2025) மாலை புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மாவீரர் தினம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மேற்கொள்ள தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசமெங்கும் தயாராகி வருகிறது.

தமிழர் தாயகத்தில் ஆரம்பமான மாவீரர் வாரம்! | Tamil Maaveerar Naal 2025 In Jaffna

அந்தவகையில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியினை புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் லண்டன் புலம்பெயர் தேசத்து உறவுகளும் , புதுக்குடியிருப்பு வாழ் உறவுகளும் இணைந்து மாவீரர் நாளினை அனுஷ்டிக்க புதுக்குடியிருப்பு நகர் பகுதி தயார் நிலையில் இருக்கின்றது.

நினைவேந்தலுக்குரிய வாரம் ஆரம்பமாகிய நாள் இன்றையநாள். மாவீரர்களின் தியாகங்களை உலகிற்கு பறை சாற்றும் முகமாக புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் வருடம் தோறும் புதுக்குடியிருப்பு நகர் பகுதி அலங்கரிக்கப்பட்டு உணர்வெழுச்சியுடன் நடைபெற்று வருவது வழமை.

[

அந்தவகையில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியானது இன்றையதினம் எழுச்சி கோலம் பூண்டுள்ளது. 21 ம் திகதியிலிருந்து 27 ம் திகதி வரையான காலப்பகுதி வரை புதுக்குடியிருப்பு நகர் பகுதியானது மாவீரர் தின நிகழ்வுகளோடு இணைந்து செயற்படும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

ஏனெனில் எமது சங்கமானது என்றும் தேசியத்தோடு சேர்ந்து பயணிக்கும் சங்கமாகும் என மேலும் தெரிவித்தார்.

இதன் போது புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் செயலாளரும் , புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினருமான சி.குகனேசனும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

செய்தி-சதீசன்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், திருநெல்வேலி, Zürich, Switzerland

04 Feb, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

25 Jan, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

25 Jan, 2021
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

22 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், மாவிட்டபுரம், கிளிநொச்சி, Toronto, Canada

26 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, ஆனைக்கோட்டை, London, United Kingdom

21 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

20 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
மரண அறிவித்தல்

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

17 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US