உழைக்கும் தொழிலாளர் நலன்களுக்காக தமிழர் விடுதலைக் கூட்டணி குரல்கொடுக்கும்!
உழைக்கும் தொழிலாளர் நலன்களுக்காக குரல் கொடுப்போம் என மே தின வாழ்த்துச் செய்தியில் தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணி மே தினம் தொடர்பில் நேற்று (30.04) வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலக தொழிலாளர் தினமாக மே 1 பெரும்பாலான நாடுகளில் விடுமுறையோடு கொண்டாடப்டுகின்றது.
அத்துடன் தொழிலாளர் உரிமைகளை மீட்டெடுத்த தினமாகவும் நினைவு கூரப்படுகின்றது. இலங்கையை பொறுத்தமட்டில் தொழிலாளர்கள் இன்றும் சிறந்த வாழ்க்கைத் தரமட்டத்தை அடையவில்லை என்றே கூறவேண்டும்.
இலங்கையின் சுதந்திரத்தின் போதே இலங்கை பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக விளங்கிய தோட்ட தோழிலாளர்கள் வஞ்சிக்கப்பட தொடங்கி விட்டார்கள்.
காலம்காலமாக தமது இரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி உழைத்த பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாடற்றவராக்கப்பட்டனர். இந்த கொடுமையை கண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஸ்தாபகர் தந்தை செல்வா தான் அங்கம் வகித்த அகில இலங்கை தமிழ் காங்கிரசை விட்டு வெளியேறினார்.
இலங்கை பொருளாதாரம்
தொடர்ந்தும் அந்த நாடற்ற தொழிலாழர்களின் நன்மைக்காக உழைத்தார். அவரால் உருவாக்கப்பட்ட தவி கூட்டணியும் இலங்கை பொருளாதாரத்தை வளர்த்த மலையக உறவுகளை தொடர்ந்தும் நினைவுகொள்ளும்.

இலங்கையில் தோட்ட தொழிலாளர் மட்டுமல்ல விவசாயம், மீன்பிடி, குடிசை கைத்தொழில் ஏன் அரச தனியார் துறைத்தொழிலாளர்களும் போதிய வருமானமின்றி துன்பப்படுகின்றனர்.
விசேடமாக அரதுறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் இடமாற்றம் பதவி உயர்வு மேலதிக நேரம்வழங்குதல் போண்றவற்றால் உயர் அதிகாரிகளால் வஞ்சிக்கப்படுகின்றனர். அத்துடன் இந்த தேசத்திற்காக உழைத்த சிரேஸ்ட பிரஜைகள் கூட தமது மிஞ்சிய காலத்தை கொண்டுசெல்ல அவதிப்படுகின்றனர்.
சுதந்திரத்தை தொடர்ந்து இனவாதம் சிறுபாண்மைக் கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டதாலும் உழல் லஞ்சம் என்பன தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களால் வளர்ககப்பட்டதாலும் இலங்கை பொருளாதாரம் வீழ்சியடைந்தது இதனால் நீண்டகாலமாக இலங்கை பெண் தொழிலாழர்கள் மத்தியகிழக்கு ற்கு சென்று மிக கடினமாகவும் சிலர் அடிமை தொழிலாளர்களாகவும் வேலை செய்கின்றனர்.
இலங்கையில் மலையக தோட்ட தொழிலாளர் மத்தியிலும் மத்திய கிழக்கு தொழிலாளர் மத்தியிலும் விரைவாக விடுதலை கிடைக்கவேண்டுமென இந்த நாளில் தமிழர் விடுதலைக்கூட்டணி வேண்டி நிற்பதுடன் அனைத்து தொழிலாளர் வாழ்விலும் சுபீட்சம் உண்டாகட்டுமென இந்த மேதின வாழ்த்தினை தெரிவிக்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்.. மீண்டும் என்ட்ரி கொடுத்த கதாபாத்திரங்கள்.. Cineulagam