நீதிபதிக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய அழுத்தம்: தமிழர் தரப்பில் பகிரங்கப்படுத்தப்பட்ட தகவல்(Video)
நீதிபதி நாட்டை விட்டு வெளியேறியமை எதிர்காலத்தின் மேல் ஒரு அச்ச நிலைமையை ஏற்படுத்துகிறது என ஈபிஆர்எல் அமைப்பின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்றையதினம்(29.09.2023) நடத்திய ஊடக சந்திப்பதிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
தமிழர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அரசாங்கம் ஒத்திசைவாகத்தான் இதுவரைக்காலமும் இருந்துள்ளது.
இப்பொழுதும் நீதிபதி ரி.சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறியது என்பது நிச்சயமாக நாட்டு மக்களுக்கும் எதிர்காலத்தின் மேல் ஒரு நம்பிக்கை இன்மையை ஏற்படுத்துகின்றது, அச்சத்தை ஏற்படுத்துகின்றது.
இந்த நாட்டின் மேல் எங்களுக்கு நீதி கிடைக்குமா என்ற கேள்விகளை எழுப்பக்கூடுகிறது.
அவ்வாறான சூழ்நிலையில் இந்த மண்ணில் வாழ முடியுமா என்ற கேள்விகள் நிச்சயமாக எம் மக்கள் மத்தியில் காணப்படும். என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள முழுமையான கருத்துக்கள் பின்வரும் காணொளியில் பதிவாகியுள்ளது.
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam