உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு (Photos)
அனைத்துலக தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு லண்டனில் இன்றும் இரண்டாவது நாளாகவும் மிகவும் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடம்பெற்று வருகின்றது.
வணிக நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இம் மாநாட்டிற்கு உலகளாவிய ரீதியில் செயற்படக்கூடிய தமிழ் தொழிலதிபர்கள் பலர் இந் நிகழ்வில் பங்குப்பற்றியுள்ளனர்.
இந்நிகழ்வில் பல தலைப்புக்களின் கீழ் உலக தொழிலதிபர்கள் பலர் கருத்துரைகளை வழங்கிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
[
முதலாம் இணைப்பு
அனைத்துலக தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு லண்டனில் இன்று மிகவும் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடம்பெற்று வருகின்றது.
லண்டன் , பிரித்தானியா,கனடா,அமெரிக்கா, மலேசியா,சிங்கப்பூர் என உலகளாவிய ரீதியில் வாழக்கூடிய தமிழர்கள் அனைவரும் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ் லண்டன் மாநாட்டிற்கு 70 இற்கும் மேற்பட்ட நாடுகளில் தொழிலில் ஈடுபடும் தமிழர்கள் கலந்து கொள்வது தனிச்சிறப்பாகும்.
புகழ் பெற்ற மனிதர்களை அழைத்து வந்து அவர்களுக்கான அரங்கை அமைப்பதை விட தமிழ் இனத்தை 21 ஆம் நூற்றாண்டில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லப்போகின்ற முயற்சிகள் அவற்றுக்கான திட்டங்கள் என்ன என்பது தொடர்பில் இந்த மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளது என்பது சிறப்பம்சமாகும்.