புலம்பெயர் தமிழர்களுக்கு சிறீதரன் புகழாரம் - செய்திகளின் தொகுப்பு (Video)
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக சகலவற்றையும் இழந்து நிற்கும் தமிழ் இனத்தை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப வேண்டிய கால கட்டத்தில் அனைவரும் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் தம்மால் இயன்றளவு வளங்களைப் பயன்படுத்தி ஈழ மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். ஈழத் தமிழர்களின் வாழ்வு புலம்பெயர் தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது எனவும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,